பிழை கடிதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிழை கடிதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மரபு வழுக்கள் / மரபுத் தொடர்


மரபு வழுக்கள் / மரபுத் தொடர் இரண்டும் ஒரே பொருளா...?

வழு என்றால் குற்றம்....

மரபு வழு என்றால் மரபை ஒழுகாது எழுதுவது பேசுவது

மரபுத் தொடர் என்றால் மரபு இதுதான் என்று உணர்த்தும் தொடர்

எ-டு:

மரபு வழு - வாழைச்செடி
மரபுத்தொடர் - வாழைக்கன்று


இனி சில மரபு வழுக்களையும் அதற்கான திருத்தங்களையும் பார்ப்போம்......

 மரத்தை வெட்டு
தக்காளியை நறுக்கு

 தக்காளியை வெட்டு என்பது வழு... தவறு...

 விறகுகளைக் கட்டு
பூக்களைத் தொடு

பூக்களைக் கட்டு என்பது வழு... அதாவது தவறு... கட்டுவது என்பது கடினமான பொருட்களையே...

பூவைத் தொடுக்க வேண்டும் என்ற தமிழின் நுட்பம் காண்க....

 〰〰〰

 கீற்று/பத்து    தேங்காய் பத்து கொஞ்சம் குடு.... பூசணிக்காயை கீற்று கீற்றாய் நறுக்கி வை


விறகை எரி
குப்பையைக் கொளுத்து
விளக்கை ஏற்று

விளக்கைக் கொளுத்து என்றால் அது வழு....



நுங்கினைச் சீவு
இளநீரைச் சீவு
தலையை வாரு...

தலையைச் சீவு என்பது வழு... நுங்கு வெட்டிக் குடு என்பதும் வழு....

ஒரே காம்பில் திரண்டிருக்கும் பூவை கொத்து என்றும் பழத்தை குலை என்றும் அழைத்தல் மரபு...

ஓன்று - பல:

பூ - கொத்து
பழம் - குலை
மரம் - தோப்பு
வெவ்வேறு மரங்கள் - சோலை
ஆடு - மந்தை
மனிதன் - கூட்டம்
யானை - பந்தி
மலை - தொடர்
கல் - குவியல், கற்குவியல்
நாற்று - முடி
மயிறு - கற்றை
கடை - சந்தை

 〰〰〰〰

கற்களை ஓர் இடத்தில் திரட்டும்போது பரப்பிப்போட மாட்டார்கள குவித்தே போடுவார்கள், எனவே கற் குவியல். யானைகள் ஒன்று சேரும்போது வரிசை வரிசையாகவே சேரும். எனவே யானைப் பந்தி. விறகைத் திரட்டி உறுதியான கயிற்றால் (கொடியால்) இறுக்கிக் கட்டுகிறோம் எனவே விறகுக் கட்டு. நாற்றை அப்படி இறுக்கிக் கட்டினால் சிதைந்து போகும். எனவே மெதுவாக அவைகளில் சில நாற்றுகளைக் கொண்டே மென்மையாக முடிந்து வைக்கிறார்கள். ஆகவே அது நாற்று முடி.

 〰〰〰〰〰

செயல்களின் அடிப்படையில் மட்டுமல்லாது வடிவம் பருவம் என்னும் அடிப்படையிலும் சொல்லாட்சி அமைய வேண்டும்.

ஓர் இலையின் பல்வேறு பருவங்களைத்
தளிர்
இலை
பழுப்பு
சருகு

என்னும் வேறு வேறு சொற்களால் குறிக்கிறோம். இந்தச் சொற்களைச் சொன்னவுடனேயே நமக்கு அதன் தோற்றமும் விளங்கிவிடுகிறது.

 அரும்பு
முகை
மொட்டு
மலர்
அலர்
வீ
செம்மல்

என்னும் சொற்கள் நமக்குப் புதுமையாகத் தோன்றும். ஆனால் நமது முன்னோர்கள் மலரின் பல்வேறு பருவங்களை இந்தத் தனித்தனிச் சொற்களாலேயே குறித்து வந்தார்கள். மலரும் பருவத்தில் உள்ள பூவையே மலர் என்றார்கள். நன்றாக விரிந்தது அலர். அலர்ந்து வாடிய தோற்றத்தில் இருப்பது வீ. வாடிச் சுருண்டு கீழே விழுந்தபின் அது செம்மல் என்றே சொல்லப்பட்டது.


ஆட்டுப் பாகன் ? ஆட்டிடையன்///
யானை இடையன்? யானைப் பாகன்///
குதிரைக்கன்று? குதிரைக்குட்டி////
ஆக்குட்டி (பசுவின் குட்டி) - ஆக்கன்று (பசுவின் கன்று) (பசு ஆரியம் - ஆ - தமிழ்; ஆவின் பால் - பசுவின் பால்)
தென்னங்கன்று ? தென்னம்பிள்ளை///
வேப்பம்பிள்ளை? வேப்பங்கன்று///
பனம்பிஞ்சு ? பனங்குரும்பை///
புளியங்குரும்பை? புளியம்பிஞ்சு
மா ஓலை - மாவிலை
பனை இலை? பனையோலை///
குருவிக்குட்டி? குருவிக்குஞ்சு///
நாய்க்குஞ்சு? நாய்க்குட்டி///
மான் குட்டி? மான் கன்று///
யானைச்சாணம்? யானை இலத்தி
எருமை இலத்தி? எருமைச் சாணம்
ஆட்டுச் சாணம்? ஆட்டுப் பிழுக்கை
கழுதைச் சாணம்? கழுதை விட்டை


ஆண்பால் பெண்பால்

அச்சன் அச்சி
அண்ணன் அண்ணி
அப்பன் அம்மை
அமைச்சன் அமைச்சி
அம்மான் அத்தை
அரசன் அரசி (ராஜா, ராணி ஆரியம் என்க)
ஆசிரியன் ஆசிரியை
ஆயன் ஆய்ச்சி
இடையன் இடைச்சி
உழவன் உழத்தி
ஊமையன் ஊமைச்சி
எம்பி எங்கை
எயினன் எயிற்றி
ஒருவன் ஒருத்தி
ஓதுவான் ஓதுவாள்

 ஆண்பால் பெண்பால்

கடுவன் மந்தி (குரங்கின் ஆணும் பெண்ணும்)
கடா    - கிடாரி, மறி (ஆடு)
கணக்கன் - கணக்கச்சி
கணவன் - மனைவி
கரியன் கரியள்
கலை - பிணை (மானின் ஆணும் பெண்ணும்)
காளை - ஆ (மாட்டின் ஆணும் பெண்ணும், பசு என்பது ஆரியம)
கிழவன் - கிழவி
குறவன் - குறத்தி
குரவன் - குரவள் (தலைவன்)
கூனன் - கூனி
கூகை - போந்து
கொழுந்தன் - கொழுந்தி (மைத்துனன்/ மச்சான்/ மைத்துனி/ மச்சினி/ மச்சி என்பதெல்லாம் ஆரியம்; மச்சான் என்பதை அளியன்/கொழுந்தன் என்றே வழங்குதல் வேண்டும்)

சிறுவன் - சிறுமி
சிவன் - சத்தி
சிறியன் - சிறியள்
சிறுக்கன் - சிறுக்கி
சிற்றப்பன் - சிற்றன்னை
சீமான் - சீமாட்டி (இவை இரண்டும் ஸ்ரீமான் என்ற ஆரியத்தின் அடி பிறந்தவையே)

சேவல் - பெட்டை (கோழியின் ஆணும் பெண்ணும்)
தச்சன் - தச்சச்சி
தம்பி - தங்கை
திருமால் - திருமகள்
திருவாளன் - திருவாட்டி (திருமதி என்பதன் மதி ஆரியமே, மதி என்பது நிலவு, அறிவு என்ற பொருளிலேயே தமிழில் வழங்கும், பெண் எனும் பொருளில் வழங்குதல் ஆரியத்தில் மட்டுமே)

மருத்துவன் - மருத்துவச்சி
மாமன் - மாமி
வீரன் - வீரி
மேலும் படிக்க »

னகர, ணகர சொற்களின் வேறுபாடுகள்


இதுவரை ரகர, றகர, லகர, ளகர, ழகர வேறுபாட்டு சொற்களைக் கண்டொம்.

இனி காணவிருப்பது  னகர, ணகர சொற்களின் வேறுபாடுகள்.


னகர, ணகர சொற்களின் வேறுபாடுகள்

அரன் - சிவன்
அரண் - கோட்டை

அன்னம் - சோறு/ அன்னபறவை
அண்ணம் - வாயின் மேற்பகுதி

ஆனி - ஆனி மாதம்
ஆணி - இரும்பு ஆணி

என்ன - என்ன வேண்டும்
எண்ண - சிந்திக்க / நினைக்க

ஏனை - மற்ற
ஏணை - தொட்டில்

கனம் - பாரம்
கணம் - கூட்டம் / தேவகணம்

கனை - ஒலி / கனைத்தல்
கணை - அம்பு

கன்னி - திருமணமாகாதப் பெண்
கண்ணி - மாலை / பிராணிகளைப் பிடிக்கும் பொறி

தனி - தனிமையான
தணி- குறைதல்

தன்மை - இயல்பு
தண்மை - குளிர்ச்சி

தினை - ஒரு வகை தானியம்
திணை - குலம் / இடம்

தின் - சாப்பிடு
திண் - வலிமை / பலம்

நான் - யான்
நாண் - வெட்கம் / வில்லின் கயிறு

பனி - குளிர்ச்சி
பணி - வேலை
பானம் - குடிக்கும் பானம் / குளிர் பானம்

பேன் - தலையில் வாழும் பேன்
பேண் - காப்பாற்று

மன் - அரசன்
மண் - பூமி/ நிலம்


மனம் - உள்ளம்
மணம் - வாசனை / கல்யாணம்

மனை - வீடு
மணை - அமரும் பலகை

மான் - ஒரு மிருகம்
மாண் - பெருமை

வன்மை - வலிமை
வண்மை - கொடை / ஈகை


சில நகர னகர ணகர வேறுபாட்டுச் சொற்கள்:

இதன் - இதனுடைய ; இதண் - பரண்
உன்னி - நினைத்து; உண்ணி - நாயுண்ணி
என்னாள் - எனது நாள் ; எந்நாள் - எந்த நாள்

கான் - காடு ; காண் - பார்
கன்னி - குமரி ; கண்ணி - தலையில் அணியும் மாலை, தொடரியின் கண்ணி
(கன்னி, குமரி இரண்டும் தனித்தமிழ்ச் சொற்களே... குமரி என்பதைத் தேவையின்றி குமாரி , குமாரன் என நீட்டி ஆரியமாக வழங்குதல் கூடாது)

இதண் - பரண்,,, காவலுக்காக மூங்கில்களால் கட்டப்படும் உயரமான இடம், வீட்டுப் பரண்

 கோன் - அரசன் ; கோண் - வளைவு (கோணம்)
சனம் - ஜனம் (மக்கள்)
சானம் - பெருங்காயம் ; சாணம் - சாணி

 துனி - துன்பம்; துணி - ஆடை,
துனை - வேகம்; துணை - உதவி (எத்துணை என்ற வழக்கு காண்க)

 நன்னுதல் - நல்ல நுதல் (அழகிய நெற்றி); நண்ணுதல் - பொருந்துதல்

நன்னுதல் வானமென் றாகிட வேயிரு
நாணவில் கோடென தோன்றிடவே
பொண்வண்ணச் செங்கதிர் போலமின் னுஞ்சிறு
பொட்டொன்று சாந்தெடுத்(து) இட்டிடுவாள்.

சிட்டுக்கும்மி:

அம்மா தன் பெண்குழந்தைக்கு சாந்துப்பொட்டு வைக்கிறாள். அவ்வாறு சிவந்த பொட்டு வைத்தவுடன் அப்பெண்ணின் அழகிய நெற்றி வானமாகவும், வில் போன்ற இரு புருவங்கள் மலைகளாகவும், வைத்த அப்பொட்டு அம்மலையிடை எழுகின்ற ஞாயிறாகவும் தோன்றினவாம்.


கடந்த கிழமையில் வரையறுக்கப்பட்ட பாடத்திட்டங்கள் பின் வருமாறு:

1. ரகர றகர வேறுபாடு
2. லகர ழகர ளகர வேறுபாடு: (எ.டு: கலை, களை, கழை...)
3. னகர ணகர வேறுபாடு:
4. மரபு வழுக்கள் (எ-டு: தென்னங்கன்றா? தென்னஞ்செடியா? தென்னம்பிள்ளையா?)
5. புணர்ச்சி (எ-டு: கயிறு கட்டிலா? கயிற்றுக்கட்டிலா? கயிறுக்கட்டிலா?)
6. ஒருமை பன்மைப் பெயர்கள் (கிளிக்களா, கிளிகளா, கிளிகள் பறந்தது சரியா, கிளிகள் பறந்தன சரியா?)
7. சமற்கிருதச் சொற்களால் வரும் குழப்பங்கள் (எ-டு: கர்ப்பம் கர்பம், கருப்பம் எது சரி?...)


இவைகளில் இதுவரை நாம் கற்றறிந்தவை:

1. ரகர றகர வேறுபாடு
2. லகர ழகர ளகர வேறுபாடு.
3. னகர ணகர வேறுபாடு.


மேலும் படிக்க »

லகர ளகர ழகர வேறுபாட்டுச் சொற்கள்


லகர ளகர ழகர வேறுபாட்டுச் சொற்களை இனி கண்டறிவோம்.


அலகு - பறவையின் நீண்ட மூக்கு; அழகு - அவள் அழகு, தமிழ் அழகு...

 தவலை - தண்ணீர் எடுப்பது
தவளை - தண்ணீரில் இருப்பது

வாளை - மீன் பெயர்
வாழை - மரத்தின் பெயர்


அலை - கடலலை; அழை - கூப்பிடு

அலைத்தல் - அடித்தல் ; அழைத்தல் - கூப்பிடுதல்

அல்லி - ஒரு பூ; அள்ளி - கையால் அள்ளி

லகர ளகர மெய்களுக்குப் பின் வேறு எந்த மெய்யெழுத்தும் வாரா...

ழகர மெய்க்குப்பின் மெய்யெழுத்து வரும்

எ-டு; வாழ்த்து, வாழ்க்கை

அளி - கொடு ; அழி - இல்லாமல் செய்...

ஆலம் - ஒரு மரம்; ஆழம் - ஆழமான குளம்

இளி - ஒரு பண்: இழி - இழிவு

இலை - வாழை இலை; இளை - மெலி, இளைப்பு ; இழை - நூலிழை

ஒலி - கேட்கும் ஒலி; ஒளி - காணும் ஒளி; ஒழி - விடு, அழி, துப்புரவாக்கு....


குளம்பு - ஆடு, மாடுகளின் காலில் பகுதி ;

குழம்பு - சோற்றோடு சேர்த்து உண்ணும் உணவு.

(பிரேசில் நாட்டில் பயிரான காப்பிக்கொட்டை ஆடு, மாடு,மான் போன்ற விலங்குகளின் குளம்பு போலிருக்கும். அந்த அடிப்படையில் பிரேசிலியன் மொழியில் குளம்பு எனும் பொருளில் காப்பி எனும் சொல் அமைந்தது. இதை ஆய்ந்து உணர்ந்து பேரறிஞர் தேவநேயப் பாவாணர் காப்பி என்பதை குளம்பி என்று தமிழாக்க்கம் செய்தாராம்.

 கழை - மூங்கில் குழாய்... கழைக்கூத்தாடி

களை - ஓய்ந்து போதல், பயிர்களுக்கு இடையே வளரும் பயனற்ற செடி...

கலை - தமிழர் கண்ட 64 கலைகள்; என்னசேதிக் குழு (whatsapp) வழியாக தமிழைக் கற்பது இந்த  64க்குள்  வராது ...

உலை - கொதிகலன் boiler (உலை வச்சிட்டேன்... சோறு இப்ப ஆயிரும் என்ற பேச்சு வழக்கு)

உளை - விலங்குகளின் பிடறி மயிர்

உழை - உழைப்பு செய்தல்


லகர ளகர ழகர வேறுபாட்டுச் சொற்கள்.

ஒல்லி - மெலிந்த , ஒள்ளிய - ஒளி பொருந்திய

உளை - விலங்குகளின் பிடறி மயிர்...


குறுந்தொகை - 121:

"விரியுளைப் பொலிந்த வீங்குசெலல் கலிமா
   
வண்பரி தயங்க எழீஇத் தண்பெயல்"

விரி உளை பொலிந்த வீங்கு செலல் கலி வண் பரி மா தயங்க - அழகு பொருந்த விரிந்த தலையாட்டமமைந்த விரைந்த செலவினையும் கனைத்தலையும் உடைய வளவியபரிமா விளங்க....


மளைப்பு? மலைப்பு/// மலையை அண்ணாந்து கண்டால் வரும் உணர்வு*....

 விழைதல் - விருமபுதல்

துல்லிய மெல்லிய
துள்ளிய  குதித்த/ ஆடிய

ஈர்ந்தண் - ஒரு பொருள் இருசொல்... ஈரம் - குளிர்ச்சி, தண்மை - குளிர்ச்சி (தண்ணீர் என்பது குளிர்ந்த நீரே...)

இன்றைக்கு, பலர்,  இந்த ஒருபொருள் இருசொல்லை ஆங்கிலம் புகுத்தி சொல்கின்றனர்

butஆனா, gateகதவு, ditchகாவா......


பால் - பசுவின் பால்
பாள் - தாழப்பாள்
பாழ் - வீணாகுதல்

பாலை - நீர் வளமற்ற நிலம்.
பாளை - தென்னை மரத்தின் பூ மடல்

தாலி - மங்கலக்கயிறு
தாளி - சமையலுக்கு தாளித்தல்.
தாழி - பெரிய பானை


லகர ளகர சொற்களைப் பார்க்கும் இவ்வேளையில் லகர ளகர மெய்களை ஈற்றெழுத்தாகக் கொண்ட சொற்களின் புணர்ச்சியையும் சற்று நினைவு கூர்வோம்....

லகர,ளகர மெய் ஈற்றுப் புணர்ச்சி:

நிலைமொழி இறுதியில் உள்ள லகர, ளகர மெய்கள், வேற்றுமைப் புணர்ச்சியில், வருமொழி முதலில் வல்லினம் (க, ச, த, ப) வந்தால் முறையே றகர மெய்யாகவும், டகர மெய்யாகவும் திரியும்.

அதாவது லகர மெய் றகர மெய்யாகவும், ளகரமெய் டகர மெய்யாகவும் திரியும்.

சான்று:

கல் + கோயில் = கற்கோயில்
முள் + செடி = முட்செடி

(கற்கோயில் – கல்லால் ஆகிய கோயில். மூன்றாம் வேற்றுமைத் தொகை; முட்செடி – முள்ளை உடைய செடி. இரண்டாம் வேற்றுமைத் தொகை)


லகர,ளகர மெய்யீற்றுப் புணர்ச்சி:

அல்வழிப் புணர்ச்சியில், (வேற்றுமை உரபு புணர்ச்சி அல்லாதவை அல்வழி என்று முன்னர் கண்டோம்) வருமொழி முதலில் வல்லினம் வந்தால், லகர ளகர மெய்கள் முறையே றகர மெய்யாகவும், டகர மெய்யாகவும் திரிந்தும் வரும்; திரியாமல் இயல்பாயும் வரும்.

சான்று:

கால் + பெரிது = காற்பெரிது, கால்பெரிது
முள் + சிறிது = முட்சிறிது, முள்சிறிது

(இவை அல்வழியில் எழுவாய்த் தொடர்)

இச்சான்றுகளில் ஒரே புணர்ச்சியில் லகரம் றகரமாய்த் திரிந்தும், திரியாமல் இயல்பாயும் வந்துள்ளதையும், ளகரம் டகரமாய்த் திரிந்தும், திரியாமல் இயல்பாயும் வந்துள்ளதையும் காணலாம்


லகர,ளகர மெய்யீற்றுப் புணர்ச்சி:

அல்வழி, வேற்றுமை ஆகிய இருவகைப் புணர்ச்சியிலும் வருமொழி முதலில் மெல்லினம் வந்தால் லகர மெய் னகர மெய்யாகவும், ளகர மெய் ணகர மெய்யாகவும் திரியும்.

சான்று:

கல் + மனம் = கன்மனம்

வாள் + மாண்டது = வாண்மாண்டது
(கன்மனம் – கல் போன்ற மனம். உவமைத் தொகை; வாண் மாண்டது – வாள் மாட்சிமைப்பட்டது. எழுவாய்த்தொடர்)

தோல் + முரசு = தோன்முரசு
முள் + மலர் = முண்மலர்
(தோன்முரசு – தோலால் கட்டப்பட்ட முரசு. மூன்றாம் வேற்றுமைத் தொகை ; முண் மலர் – முள்ளை உடைய மலர். இரண்டாம் வேற்றுமைத் தொகை)


லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி

அல்வழி, வேற்றுமை ஆகிய இருவகைப் புணர்ச்சியிலும் வருமொழி முதலில் இடையினம் வந்தால் லகர, ளகர மெய்கள் இயல்பாகும்.

சான்று:

கொல் + யானை
= கொல்யானை

கள் + வழிந்தது = கள்வழிந்தது

(கொல் யானை – வினைத்தொகை; கள் வழிந்தது – எழுவாய்த் தொடர்)

வில் + வளைத்தான்
= வில் வளைத்தான்  வேற்றுமை

தோள் + வலிமை = தோள் வலிமை

(வில் வளைத்தான் – வில்லை வளைத்தான். இரண்டாம் வேற்றுமைத் தொகை; தோள் வலிமை – தோளினது வலிமை – ஆறாம் வேற்றுமைத் தொகை.)


லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி – சிறப்பு விதி

தனிக்குறிலைச் சார்ந்த லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி
அல்வழிப் புணர்ச்சியில், தனிக்குறிலின் பின் நின்ற லகர, ளகர மெய்கள் வருமொழி முதலில் தகர மெய் வருமானால் முறையே றகர, டகர மெய்களாகத் திரிவதோடு அல்லாமல் ஆய்தமாகவும் திரியும்.

சான்று:

கல் + தீது = கற்றீது, கஃறீது
முள் + தீது = முட்டீது, முஃடீது

இச்சான்றுகளில் வருமொழி முதலில் தகரமெய் வர, தனிக்குறிலின் பின் நின்ற லகர ளகரமெய்கள் பொதுவிதிப்படி முறையே றகர, டகர மெய்களாகத் திரிந்ததோடு மட்டும் அல்லாமல், ஆய்தமாகவும் திரிந்தன.

லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி – சிறப்பு விதி
சில சிறப்புச் சொற்களுக்கு மட்டுமுள்ள சில சிறப்பு விதிகளைக் காண்க

வேல் + தீது = வேறீது
வாள் + தீது = வாடீது

கால் + கை = கால்கை (காலும் கையும்)
பொருள் + புகழ் = பொருள்புகழ் (பொருளும் புகழும்)
வேல் + படை = வேற்படை (வேல் ஆகிய படை)
வாள் + படை = வாட்படை (வாள் ஆகிய படை )
நெல் + சிறிது = நெற்சிறிது
செல் + கரிது = செற்கரிது
கொல் + கடிது = கொற்கடிது
சொல் + புதிது = சொற்புதிது

இவை பொது விதிகளை மீறி வரும் சொற்களின் புணர்ச்சி என்க



லகர ழகர ளகர  வேறுபாடுகள்:

உளவு - வேவு
உழவு - பயிர்த்தொழில்
உழ - பண்படுத்த
உள - உள்ளன
உழி - இடம்; பக்கம்

 உலுக்கு - குலுக்கு, அசை;
உளுக்கு - சுளுக்கு
உல் - தேங்காய் உரிக்கும் கருவி
உள் - உட்புறம்
உல்கு - சுங்கம்
உள்கு - நினை
உல்லம் - ஒரு மீன்
உள்ளம் - மனம்



 எலும்பு - எலும்பு
எழும்பு - உயர்
எல் - பகல், ஞாயிறு
எள் - ஓர் செடி, நிந்தை

 எள்ளி என்பதை யோர்க



கலம் - பாத்திரம், அளவு
களம் - மிடறு, போர்க்களம்; நெற்களம்; இடம்
கலவு - கூட்டு (கலத்தல்)
களவு - திருட்டு
கலி - ஒலி, வறுமை
களி - மகிழ்ச்சி, ஓர் உணவு
கழி - நீக்கு



கல்வி - படிப்பு
கள்வி - திருடி
காலம் - பருவம்
காளம் - கருமை, நஞ்சு (காளமுகில் ; காளம் ஒரு அரிய தமிழ்ச்சொல்)



கிலி - அச்சம் (இது தெலுங்குச் சொல்)
கிளி - கிளிப்பிள்ளை
கிழி - கிழிப்பாய்



குலை - கொத்து
குழை - தளிர் இலை,, இளகச்செய், சேர்த்துக் குழை


கூலம் - கடைவீதி
கூளம் - குப்பை
கூலி - ஊதியம்
கூளி - பேய், பெருங்கழுகு


கேழ் - ஒப்பு, ஒளி, நிறம்
கேள் - கேட்பாய், உறவு (யாதும் ஊரே, யாவரும் கேளிர்)
கேலி - பகடி (கேலி, பரிகாசம் என்பன சமற்கிருத ஆரியச் சொற்கள், பகடி கிண்டல் என்பவை தமிழ்)


 கொலு - நிமிர்ச்சி, குமுகம்
கொழு - ஏரின் முனை, காறு
கொளு - பாட்டின் கருத்தினை விளக்குஞ் சொற்றொடர் (இந்த கொளு என்பதே க்ளூ என்ற ஆங்கிலச் சொல்லாக மாறியிருக்கக் கூடும்!)

 கொலை - கொல்லுதல்
கொளை - இசைப்பாட்டு
கொல் - கொல்லன், கொல்லு
கொள் - வாங்கு, கொள்ளு எனும் தவசம் (தானியம் என்பது தமிழில் தவசம்)

 கொல்லி - ஒரு மலை
கொள்ளி - நெறுப்புறு விறகு
கொல்லை - தோட்டம்
கொள்ளை - கொலை, விலை


 கோலம் - அழகு, தமிழ்ப்பெண்டிர் வாசலிலிடும் கோலம்
கோளம் - உருண்டை
கோழி - கோழி
கோளி - அத்தி
கோல் - அம்பு, ஊன்றுகோல், எழுதுகோல்
கோள் - புறங்கூறல், கோள் சொல்லுதல்



சுல்லி - அடுப்பு
சுள்ளி - சிறு விறகு



சூலி - பிள்ளைத் தாச்சி (கர்ப்பிணி என்பது ஆரியம்), சூல் கொண்ட முகில்
சூழி - உச்சி
சூளி - ஆண்மயிர்

சூலை - ஒரு நோய்
சூளை - செங்கற் சூளை
சூல் - கருவுறுதல்
சூழ் - சுற்றிச் சூழ்தல்
சூள் - சூளுரை, ஆணை, அருஞ்சூள் (அன்னைத் தமிழ்மேல் அருஞ்சூள் உரைத்தெழுந்தோம்)... (சபதம் என்பது ஆரியம்)



செதில் - மரச்செதில்
செதிள் - மீன் செதிள்

செல்லு - கழிவு
செள்ளு  - ஒரு பூச்சி , தெள்ளுப்பூச்சி


சோலி - கருமம் (இதுவும் தெலுங்குச்சொல்)
சோளி (பிச்சைக்காரர் பை) ....ஜோல்னா பை என்பது தொங்கு பை இது உருதுச் சொல், ஜோல்னா என்றால் ஊஞ்சலாடுதல்


தாலி - தாலிக்கயிறு
தாளி - பனை
தாழி - குடம், சாடி, (முதுமக்கள் தாழி)


நலி - வருந்துதல், நலிவடைதல்
நளி - நெருக்கம், குளிர்
நல்லார் - நல்லவர்
நள்ளார் - பகைவர்
மேலும் படிக்க »

இலக்கணப்படி செய்யுள் எழுதுவது எப்படி ?

காரி    போற்றுதும்!
         காரி     போற்றுதும்!
மாரி     போற்றுதும்!
         மாரி     போற்றுதும்!


மழையா      லுலக
          மாட்சி   பெறுவதால்
மழையே     யமிழ்தென
           மேவிப்    போற்றுதும்!


துய்ப்பார்க்குத்      துய்க்கும்
            துய்பொரு    ளாக்கித்
துய்ப்பார்க்குத்        தானே
             துய்பொரு    ளுமாகி,
விரிநீ        ருலகத்து
              வாழு    முயிர்க்கெலாம்
வாழ்வு       தந்திடும்
               வான்மழை    போற்றுதும்!


உழவு        செய்வோர்க்
               குதவிகள்   புரிந்தே
வுலகோர்க்      கெல்லா
               முண்ணு   முணுவுக
ளீந்தவர்       பசிநீக்கு
                முயர்மழை    போற்றுதும்.


மாரி்      போற்றுதும்!
           மாரி    போற்றுதும்!
காரி     போற்றுதும்!
           காரி     போற்றுதும்!


*******************************************


காரி    போற்றுதும்!
மாரி     போற்றுதும்!

 (அஃறிணை உயிரீறுகளின் முன் வல்லினம் வந்தன... இவை இரண்டாம் வே.தொகைகள்.. எனவே வலி மிகாது வந்தன... )

மழையா லுலக

(உடன்மேல் உயிர் ஏறியது.. மழையால் உலகம்)

மாட்சி   பெறுவதால்
(அஃறிணை உயிரீற்றின் முன் வல்லினம் வந்தது... இரண்டாம் வே.தொகை.. எனவே வலி மிகாது வந்தது... )

மழையே  யமிழ்தென
 (உடம்படுமெய் புணர்ச்சி... யகரம் ஏறியது.. )
         
மேவிப்    போற்றுதும்!
( அஃறிணை உயிரீற்றின் முன் வல்லினம் வந்தது... இஃது நாலாம் வேஂதொகை.. எனவே வலி மிகுந்தது- மேவித்துப் போற்றுதும் என விரிக்க..)

துய்ப்பார்க்குத்      துய்க்கும்
(வன்றொடர்க் குற்றியலுகர முன் வல்லின மிகும்)
           
துய்பொரு    ளாக்கித்
 (துய்பொருள் வினைத்தொகை - துய்த்த/துய்க்கின்ற/துய்க்கும் என விரிக்க... அல்வழி... யகரவீற்றினை யடுத்து வரும் வல்லினம் அல்வழியில் மிகாது... எனவே மிகாது வந்தது)


துய்ப்பார்க்குத்        தானே
( ஆக்கித் துய்ப்பவார் - இகரவீற்று வினையெச்சமடுத்த வல்லினம் மிகும்; துப்பார்க்குத் -வன்றொடர்க் குற்றியலுகர முன் வல்லின மிகும்)

 துய்பொரு    ளுமாகி, (துய்பொருள் - இதுவுமது; பொருளும் ஆகி - உடல்மேன் உயிர் ஒன்றியது)

விரிநீ        ருலகத்து
( நீர் உலகத்து -உடல்மேன் உயிர் ஒன்றியது)
             
வாழு    முயிர்க்கெலாம் ( வாழும் உயிர்- உடல்மேன் உயிர் ஒன்றியது; உயிர்க்கு எலாம் - குற்றுகரமடுத்து உயிர் வந்ததால் அக்குற்றுகங் கெட்டது)

வாழ்வு       தந்திடும்
 (இரண்டாம் வே.தொகை.. எனவே வலி மிகாது வந்தது...
             
வான்மழை    போற்றுதும்! (இரண்டாம் வே.தொகை.. எனவே வலி மிகாது வந்தது... )

உழவு        செய்வோர்க் (உயிர்த்தொடர்க் குற்றுகரத்தை யடுத்து வரும் வல்லினம் இருவழியும் மிகாது.. எனவே உழவு செய் என மிகாது வந்தது)

குதவிகள்   புரிந்தே (செய்வோர்க்கு உதவி - செய்வோர்க்குதவி - குற்றுகரமடுத்து உயிர் வந்ததால் அக்குற்றுகங் கெட்டது)

வுலகோர்க்      கெல்லா (புரிந்தே உலகோர் - ஏகாரமுன் உயிர் வரின் யகர/வகர வுடம்படு மெய் ஏதேனும் வரும்... இங்கு வகரமெடுத்தது ஆசிரியர் தேர்வு ; உலகோர்க்கு எல்லாம் - உலகோர்க்கெல்லாம் - - குற்றுகரமடுத்து உயிர் வந்ததால் அக்குற்றுகங் கெட்டது )

முண்ணு   முணுவுக (எல்லாம் உண்ணு / உண்ணும் உணவு- உடன்மேல் உயிரொன்றின;)

ளீந்தவர்       பசிநீக்கு (உணவுகள் ஈந்தவர் / நீக்கும் உயர்- உடன்மேல் உயிர் ஒன்றின)

முயர்மழை    போற்றுதும். (மழை போற்றுதும் - அஃறிணை உயிரீற்றின் முன் வல்லினம் வந்தது... இரண்டாம் வே.தொகை.. எனவே வலி மிகாது வந்தது...

மாரி்      போற்றுதும்!
           மாரி    போற்றுதும்!
காரி     போற்றுதும்!
           காரி     போற்றுதும்!
(மேலே சொல்லப்பட்டது)
மேலும் படிக்க »

வலிமிகும் இடங்களுக்குரிய விதிகள்


சொற்றொடர்களில் வல்லெழுத்துக்களான "க், ச், த், ப்," மிகுந்து வருதலையே சுருக்கமாக வலிமிகுதல் எனப்படுகிறது. வலிமிகுதலால் சொற்றொடர்களில் பொருள் வேறுபாடு உண்டாகும். "தந்த பலகை" என்னும் தொடருக்கும் "தந்தப் பலகை" என்னும் தொடருக்கும் பொருள் வேறுபாடு உண்டு.
தந்த பலகை என்பது கொடுத்த பலகை என்றும், தந்தப் பலகை என்பது தந்தத்தால் ஆன பலகை என்று பொருள்படும்.

🌹🌹

 வலிமிகும் இடங்களுக்குரிய விதிகள். 1 - 14
1) அ, இ, எ, இந்த, எந்த, அங்கு, இங்கு, ஆங்கு, இங்கு, யாங்கு, ஆண்டு, ஈண்டு, யாண்டு, அப்படி, இப்படி, எப்படி,
ஆகிய சொற்களுக்குப் பின் வலிமிகும்.

எ.காட்டு
அ+காட்சி = அக்காட்சி
இ+படம் = இப்படம்
எ+சங்கம் =எச்சங்கம்
அந்த+பையன்=அந்தப் பையன்
பாதி+துணி= பாதித்துணி

 2) வந்தொடரக் குற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வலிமிகும்.

எ.காட்டு
பட்டு + புடவை=
பட்டுப்புடவை
விற்று + தந்தார்  = விற்றுத் தந்தார்

3) நிலைமொழி ஈற்றில் உயிரெழுத்து நிற்க வலிமிகும்

 எ.காட்டு

கனா + கண்டான் = கனாக் கண்டான்
பலா + பழம் = பலாப்பழம்
4) முற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வலிமிகும்.

எ.காட்டு
முழு + பாடல் = முழுப்பாடல்
நடு + தெரு = நடுத்தெரு

5) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வலிமிகும்

எ.காட்டு
பேசா - பையன்= பேசாப் பையன்
ஓடா + குதிரை = ஓடாக் குதிரை

 6) அகர, இகர ஈற்று வினையெச்சங்களின் பின் வலிமிகும்.

எ.காட்டு
செய்ய + சொல் = செய்யச்சொல்

ஆட + கண்டான் = ஆடக் கண்டான்
ஆடி + பாடினான் = ஆடிப் பாடினான்

 7) ஆய், போய் என முடியும் வினையெச்சங்களின் பின் வலிமிகும்
எ.காட்டு
போய் + பார்த்தான் = போய்ப் பார்த்தான்
வருவதாய் + கூறினான்=
வருவதாய்க் கூறினான்


8) இரண்டாம் வேற்றுமை உருபு (ஐ) க்குப் பின் வலிமிகும்.

எ.காட்டு
மானை + பார் = மானைப் பார்
நாயை + துரத்து = நாயைத் துரத்து

9) நான்காம் வேற்றுமை உருபு (கு) க்குப் பின் வலிமிகும்.

எ.காட்டு
பள்ளிக்கு + சென்றான் = பள்ளிக்குச் சென்றான்
அவனுக்கு + கொடு = அவனுக்குக் கொடு

 10) ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாக இருப்பின் வலிமிகும். (நிலைமொழியில் ஆறாம் வேற்றுமை உருபுகளான அது, உடைய, ஆகியவை மறைந்து நிற்கும்)

எ.காட்டு
நாய் + குட்டி = நாய்க்குட்டி
யானை + தந்தம் = யானைத் தந்தம்
வண்டி + சக்கரம் = வண்டிச் சக்கரம்

11) உவமைத் தொகையில் வலிமிகும். ( உவமை உருபுகளான போல, போன்ற, ஒப்ப, நிகர முதலியவை நிலைமொழியில் மறைந்து நிற்கும்)

எ.காட்டு
மலை + தோள் = மலைத்தோள்
மலர் + கை = மலர்க்கை

 12) பண்புத் தொகையில் வலிமிகும்.
எ.காட்டு
வெள்ளை + தாள் = வெள்ளைத்தாள்
சதுரம் + பலகை = சதுரப்பலகை

 13) நிலைமொழி சிறப்பு பெயராகவும், வருமொழி பொதுப் பெயராகவும் வரும் இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வலிமிகும்.

எ.காட்டு
தை + திங்கள் = தைத்திங்கள்
பலா + பழம் = பலாப்பழம்

14) ஓரெழுத்துச் சொல்லுக்குப் பின் வலிமிகும்.

எ.காட்டு
தீ + சட்டி = தீச்சட்டி
கை + குட்டை = கைக்குட்டை
பூ + கூடை = பூக்கூடை



இவை வலிமிகும் இடங்களைக் கண்டு கொள்ள எளிய வழிகள்...
மூன்றாவதற்கும் பதினான்குக்கும் விலக்குகள் உள்ளன... மற்றவற்றை முடிபாகக் கொள்ளலாம்... நன்றி...
மேலும் படிக்க »

ரகர றகர வேறுபாட்டுக் குறிப்புகள்: பிழை கடிதல்


அன்பு நண்பர்களுக்கு வணக்கம்...

எழுத்துப் பிழைகளும் திருத்தங்களும் என்ற தலைப்பில் இன்று முதல் ஆறு நாட்களுக்கு பதிவுகள் வரவேற்கப்படுகின்றன...

பெரும்பாலும் எழுத்துப் பிழைகளும் சொற்பிழைகளும் கீழ்காணும் பிரிவுகளில் அடக்கி விடலாம். அவையாவன

1. ரகர றகர வேறுபாடு (எ.டு - கருப்பா? கறுப்பா?; பயிற்ச்சியா பயிற்சியா? பயிர்ச்சியா?; வரையரையா? வறையரையா? வரையறையா? என்பன போன்ற குழப்பங்களால் வரும் பிழைகள்.

2. லகர ழகர ளகர வேறுபாடு: (எ.டு: கலை, களை, கழை...)

3. நகர னகர ணகர வேறுபாடு: (என்னாள் என்பதா எந்நாள் என்பதா?)

4. மரபு வழுக்கள் (எ-டு: தென்னங்கன்றா? தென்னஞ்செடியா? தென்னம்பிள்ளையா?)

5. புணர்ச்சி (எ-டு: கயிறு கட்டிலா? கயிற்றுக்கட்டிலா? கயிறுக்கட்டிலா?)

6. ஒருமை பன்மைப் பெயர்கள் (கிளிக்களா, கிளிகளா, கிளிகள் பறந்தது சரியா, கிளிகள் பறந்தன சரியா?)

7. சமற்கிருதச் சொற்களால் வரும் குழப்பங்கள் (எ-டு: கர்ப்பம் கர்பம், கருப்பம் எது சரி?...)

இவ்வேழு பிரிவுகளில் பெரும்பான்மை பிழைகளை வகைப்படுத்திக் கொள்வோம். பின்னர் ஒவ்வொன்றாக விரிவாகப் பார்ப்போம் என்பதே வரும் கிழமைக்கான திட்டம் என்க...

ரகர றகர வேறுபாடு குறிப்புகள்:

(ரகரம் - இடையினம்
றகரம் - வல்லினம்)

🌸 குறிப்பு 1.

றகர மெய் தன் உயிர்மெய்யோடு (றகர உயிர்மெய்யோடு) சேர்ந்து வரும்; ரகர மெய் தன் உயிர்மெய்யோடு (ரகர உயிர்மெய்யோடு) சேர்ந்து வாரா.

எ-டு: குற்றம், விற்றான், புற்று, நெற்றி....

 🌸  குறிப்பு 2.:

றகரம், னகர மெய்க்குப் பின் வரும்; ரகரம் னகர மெய்க்குப் பின் வாரா.

எ-டு: குன்றம், தின்றான், பன்றி, கன்று, கொன்றை, சான்றோர்

றகரத்திற்கு னகரம் இனம் ஆகும். அதனால்தான் நெடுங்கணக்கில் றகரமும் னகரமும் அடுத்தடுத்து வைக்கப்பட்டுள்ளன. அதாவது, றகரமும் னகரமும் அக்காள் தங்கை என்று நினைவிற் கொள்க... இனவெழுத்துக்களைப் பற்றி எழுத்ததிகாரத்தில் நாம் கண்டதை ஓர்க..

 🌸 குறிப்பு 3.

றகரமும் சரி ரகரமும் சரி சொல்லின் முதல் எழுத்தாக வாரா.

எ-டு:
(பிழை? திருத்தம்/// பற்றுக்கோடு*)

ரங்கன்?  அரங்கன்/// அரங்கம்*

ராமன்? இராமன்///

ரோமம்? உரோமம்///

 🌸  குறிப்பு 4.

றகர மெய் ஒரு சொல்லின் ஈற்றெழுத்தாக வாரா. ரகர மெய் வரும்.

எ-டு: நீர், வேர், பார்,...

ரகர றகர வேறுபாடு குறிப்புகள்:

(ரகரம் - இடையினம்
றகரம் - வல்லினம்)

🌸 குறிப்பு 1.

றகர மெய் தன் உயிர்மெய்யோடு (றகர உயிர்மெய்யோடு) சேர்ந்து வரும்; ரகர மெய் தன் உயிர்மெய்யோடு (ரகர உயிர்மெய்யோடு) சேர்ந்து வாரா.

எ-டு: குற்றம், விற்றான், புற்று, நெற்றி....

 🌸  குறிப்பு 2.:

றகரம், னகர மெய்க்குப் பின் வரும்; ரகரம் னகர மெய்க்குப் பின் வாரா.

எ-டு: குன்றம், தின்றான், பன்றி, கன்று, கொன்றை, சான்றோர்

றகரத்திற்கு னகரம் இனம் ஆகும். அதனால்தான் நெடுங்கணக்கில் றகரமும் னகரமும் அடுத்தடுத்து வைக்கப்பட்டுள்ளன. அதாவது, றகரமும் னகரமும் அக்காள் தங்கை என்று நினைவிற் கொள்க... இனவெழுத்துக்களைப் பற்றி எழுத்ததிகாரத்தில் நாம் கண்டதை ஓர்க..

 🌸 குறிப்பு 3.

றகரமும் சரி ரகரமும் சரி சொல்லின் முதல் எழுத்தாக வாரா.

எ-டு:
(பிழை? திருத்தம்/// பற்றுக்கோடு*)

ரங்கன்?  அரங்கன்/// அரங்கம்*

ராமன்? இராமன்///

ரோமம்? உரோமம்///

 🌸  குறிப்பு 4.

றகர மெய் ஒரு சொல்லின் ஈற்றெழுத்தாக வாரா. ரகர மெய் வரும்.

எ-டு: நீர், வேர், பார்,...

🌸 குறிப்பு 5.

னகர மெய்யை ஈற்றிலுடைய சொற்களும் லகர மெய்யை ஈற்றிலுடைய சொற்களும் நிலைமொழியாய் நிற்க, வல்லெழுத்து வருமொழியாய் வரின் றகரம் தோன்றும். ரகரம் தோன்றா.

எ-டு: பொன் + கொல்லன் = பொற்கொல்லன்
 கல் + சட்டி = கற்சட்டி
 பல் + பொடி = பற்பொடி

🌸 குறிப்பு 6:

றகர மெய்க்குப் பின் (ற் எனும் மெய்யெழுத்துக்குப் பின்), க, ச, ப, ற என்னும் நான்கு உயிர்மெய்கள் மட்டுமே வரும். மற்றவை வாரா.

எ-டு: நிற்க, முயற்சி, வெற்பு, உற்றார்

ரகர மெய்க்குப் பின் (ர் எனும் மெய்யெழுத்துக்குப் பின்) க, ங, ச, ஞ, த, ந, ப, ம,ய,வ எனும் இப்பத்து உயிர்மெய்களும் வரும். மற்றவை வாரா...(ட, ண, ர, ல, ழ, ள, ற, ன எனும் உயிர்மெய்கள் வாரா)

எ-டு: வேர்கடிது, வேர்சிறிது, வேர்தீது, வேர்நீண்டது, வேர்பெரிது, வேர்மாண்டது, வேர்வலிது, வேர்யாது.

ரகர றகர வேறுபாட்டுக் குறிப்புகள்:

🌺 குறிப்பு 7:

 ரகர மெய், தனி உயிர்க் குற்றெழுத்தின் பின்னாவது, தனி உயிர்மெய்க் குற்றெழுத்தின் பின்னாவது நில்லாது. றகரம் அவ்வாறு நிற்கும்

தனி உயிர்க் குற்றெழுத்து - அ, இ, உ, எ, ஒ
தனி உயிர்மெய் குற்றெழுத்து - க, கி, கு, கெ, கொ, ச, சி, சு.....முதலியன

எ-டு: உற்றார், சுற்றார்

அர்ச்சனை, கர்ப்பம், தர்ப்பை என்பன இவ்விதிப்படி தவறு என்பது காண்க. இவை தமிழல்ல என்பதை தமிழே காட்டிவிட்டதென்க...

அர்ச்சனை? அருச்சனை///
கர்ப்பம்? கருப்பம்///
தர்ப்பை? தருப்பை///

 🌺 குறிப்பு 8:

றகர மெய்ய்க்குப் பின் மெய்யெழுத்து வராது. வராது. வராது. உயிர்மெய் மட்டுமே வரும்.

பயிற்ச்சி? பயிற்சி///
வரவேற்ப்பு? வரவேற்பு///
வரவேற்பிற்க்கு? வரவேற்பிற்கு///
அதற்க்கு? அதற்கு///

ரகர மெய்க்குப்பின் மெய்யும் வரும், உயிர்மெய்யும் வரும்

எ-டு: ஆர்க்கும், அயர்ச்சி, தேர்வு

🌺  குறிப்பு 9:

றகரம் தமிழ் மொழிக்கே சிறப்பானது. ரகரம் பல மொழிகளில் உண்டு
எ-டு: பிராமணர் (வடமொழி)
 அலமாரி (போர்த்துக்கேசியம்)
 கரம் = சூடு (இந்துசுதானி)
 பிரின்சிபால் = தலைவர் (ஆங்கிலம்)
எனவே ரகரம் கொண்ட பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுத வேண்டி வந்தால் றகரம் இடாது ரகரமே இட வேண்டும்.

🌺 குறிப்பு 10:

றகரம் வரப்பெற்ற தமிழ்ச்சொற்கள் அழுத்தமான ஓசையை உடையனவாய் இரு
க்கும். ரகரம் வரப்பெற்ற தமிழ்ச்சொற்கள் வன்மையோசையும் மென்மையோசையும் அல்லாத நடுத்தர ஓசையினை உடையதாக இருக்கும்

எ-டு:
அரு - அருமை; அறு - துண்டி
அரை - பாதி; அறை - அடி
இரத்தல் - யாசித்தல்; இறத்தல் - சாதல்
இரங்கு - மனமிரங்கு; இறங்கு - கீழே இறங்கு


ரகர றகர வேறுபாடு:


அரம் - ஓர் ஆயுதம்; அறம் - நன்மைகளின் மொத்தவுருவாகத் தமிழர் மேற்கொள்ளும் வாழ்க்கைமுறை (இல்லறம், துறவறம்)
அரமனை - அரசன் வீடு; அறமனை - அறச்சாலை
அரி - திருமால்; அறி - அறிந்துகொள்
அரிவை - பெண்; அறிவை - அறிவாய்
அரு - அருமையான; அறு - துண்டி
அருகு - நெறுக்கம்; அறுகு - அறுகம்புல்
அருவி - மலையருவி; அறுவி - அறச்செய்
அரை - பாதி; அறை - வீட்டின் அறை, கன்னத்தில் அறை
அலரி - ஒருவகைப் பூ; அலறி - கதறி

ஆர - நிறைய; ஆற - தணிய
ஆரல் - ஒருவகை மீன் ; ஆறல் - தணிதல்

 இர - யாசி; இற - சாகு, கட
இரகு - ரகு என்ற பெயர்; இறகு - பறவையின் சிறகு
இரங்கு - மனமிரங்கு; இறங்கு - கீழிறங்கு
இரத்தல் - பிச்சையெடுத்தல்; இறத்தல் - சாதல், கடத்தல் (கட என்றால் தாண்டிச் செல் என்பது பொருள்)
இரவு - இராத்திரி,
இறவு - சாதல்
இரு - உட்கார்;
இறு - வடிகட்டு, ஒடி (இரண்டும் வினைச்சொற்கள்)
இரு - இரண்டு
இருக்கு - ஆரிய வேதம்; இறுக்கு - அழுந்தக் கட்டு
இருப்பு - நிலைமை (கையிருப்பு);
இறுப்பு - குடியிறை, தங்குதல், கடன் செலுத்துதல்.
இரும்பு - இரும்பு; இறும்பு - சிறுமலை, வியப்பு (இறும்பூது)
இரை - உணவு;
இறை - கடவுள், அரசன், வரி
ஈர் - இழு (ஈர்ப்பு);
ஈறு - முடிவு, கடைசி எழுத்து;
 ###
உரல்- உரல்; உறல் - அடைதல்
உரவு - வலிமை; உறவு - சொந்தம்
உரி - பட்டை; உறி - பண்டங்கள் வைக்கும் தூக்கு (உறியடித்தல்)
உரிய - உரிமையான; உறிய - உறிஞ்ச
உரு - உருவம்; உறு - பொருந்து, ஓர் உரிச்சொல்
உருக்கு - இளகச்செய்; உறுக்கு - கோபி
உருமு - இடி; உறுமு - உறுமுதல், அரிமா எழுப்பும் ஒலி (அரிமா - சிங்கம்)
   உரை - சொல், தேய் (உரைகல்), பாட்டுரை; உறை - பை, மூடிவைக்கும் பொருள்.

ஊர - நகர, பரவ;
ஊற - சுரக்க (ஊற்று)
எரி - தீ; எறி - வீசு
ஏரி - பெரிய குளம்;
ஏறி - மேல் ஏறி

கரி - அடுப்புக்கரி, கரிய- கருப்பு நிறத்ததான, கருமை, கரிக்கட்டை , கரிதல் - தீய்ததல், கரிச்சாங்குருவி, கரி நாள், கரிபூசு, கரிசல், கரும்பு, கரிய, கரியமான், கருகல், கருக்கம் - கார்மேகம், கருங்குரங்கு, கருநாகம், கருமணி - கணணின் கருப்பு விழி, கருமயிர், கருமுகில் என கருமையைக் குறிக்கும் எண்ணற்ற சொற்கள் இடையின ரகரத்தையே ஆண்டு வருதல் காண்க...

ஆயினும், கறுப்பு என்று சொல்வது பெருவழக்கு ஆகிவிட்டமையால் கறுப்பு என்பதை நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டோம். எனவே கறுப்பு என்பதும் சரி என்றே கொள்க....

வேறு அனைத்து கருமை சார்ந்த பயன்பாட்டுக்கும் றகரம் இடாது ரகரமே இடவேண்டும் என்றோர்க....

🌸🌸🌸🌸🌸🌸

சபையில் சான்றோருக்கு ஒரு தாழ்மையான கேள்வி.

கேள்வி இதுதான்....

கருமை சார்ந்த அனைத்து பயன்பாடுகளுக்கும் ரகரமே வரும்போது கறுப்பு என்ற ஒரு சொல்லுக்கு மட்டும் றகரம் வந்தது சிலரது பிழையாலேயே என்பது தெளிவு... இதனை நாம் ஏற்றுக்கொள்வதா? எதிர்ப்பதா? என்பதே கேள்வி....

 கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள்...

என்று தொல்காப்பியமும் கறுப்பு என்பது கறுவுதல் கோபப்படுதல் என்றே காட்டுகிறது...

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள். - 312

என்ற குறளிலும் கறுத்து என்பது கறுவு கொண்டு என்ற பொருளிலேயே வந்துள்ளது...

தமிழில் 'கறுமை' என்ற சொல் 'கரிய' என்ற பொருளில்  இல்லாமையால், 'கருமை' என்றே வழங்குதலால், விடை கிடைக்கும் வரை, கரிய நிறத்தை கருமை என்றும் கருப்பு என்றுமே நாம் வழங்குவோம்.....

ரகர றகர வேறுபாட்டுச் சொற்கள் சிலவற்றை நேற்று கண்டோம்.
இவற்றுள் சில சொற்களுக்கு ரகர றகரத்தை மாற்றிப் போட்டு எழுதினால், பொருள் தலைகீழாகக் கூட மாறக்கூடும் என்பதால் இவ்வேறுபாட்டுச் சொற்களைப் படித்தும், மனதில் அசை போட்டும், பிரித்து உணர்ந்தும், ஒரு சொற்றொடராக்கிப் பார்த்தும், ஒலித்தும் பழகிக்கொள்வது மிகவும் தேவை.

 எழுத்துப் பிழைகள் வருவது இயல்பே. அவ்வெழுத்துப் பிழைகள் இரு வகைப்படும்.

ஒன்று, நாம் எழுதும் போதே இது சரியா தவறா என்ற குழப்பத்தைத் தோற்றுவிக்கும் பிழைகள்... இதைச் சரி செய்வது எளிது.. ஏனென்றால் கேள்வி நமக்குத் தோன்றிவிட்டது. விடையை சிறு முயற்சி மூலம் கண்டு கொள்ளலாம்.

மற்றொன்று, நாம் எழுதும்போது இது தவறா என்று தோன்றாது நாம் சரியே என்று நினைத்து எழுதும் பிழைகள். இதைச் சரி செய்வது கடினம். ஏனென்றால் நமக்கு இங்குதான் கேள்வியே தெரியாதே, பிறகு எப்படி விடை கண்பது..
இதற்காகவே இந்த ரகர றகர வேறுபாட்டுச் சொற்களை இங்கு வரிசைப் படுத்தி பொருளோடு இடப்படுகின்றன என்றோர்க.
 எடுத்துக்காட்டுக்கு ஒரு சொற்றொடர்...


"பசியார உணவளித்த உங்களை மனதாற வாழ்த்துகின்றேன"
மேலே உள்ள உணர்வு பொங்கும் சொற்றொடரில் உள்ள ஒரு பிழை, அச்சொற்றொடரின் பொருளைத் தலைகீழாக மாற்றிவிடுகின்றது பாருங்கள்.

நேற்றைய பாடத்தில் கண்டபடி

ஆர- நிறைய; ஆற - தணிய

பசி என்பது வயிற்றின் வெப்பம். அது உணவுண்டால் தணிகிறது. எனவே பசியாற என்பதும் பசியாற்று என்பதும் பசி என்னும் வெப்பத்தை தணித்தல் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பசியார என்றால் நீங்கள் சரியாக சோறு போடவில்லை, என் பசியை நிறையச் செய்து விட்டீர்கள் என்றல்லவா பொருள் தலைகீழாகிறது...

அதேபோல, ஒருவரை வாழ்த்தும்போது மனம் வெப்பமாகவா இருக்கும்? மனம் வெப்பமாக இருந்தால் ஒருவரை வாழ்த்த முடியுமா? முடியாது. திட்டத் தான் முடியும். வாழ்த்தும்போது மனம் நிறைந்து போகிறதன்றோ? நிறைவடைகிறதன்றோ? இந்த நிறைவுப் பொருளைத் தரும் ஆர என்ற சொல்லைத் தான் நாம் மனதார, வாயார, உளமார வாழ்த்துகிறேன் என்று சொல்கிறோம்.

எனவே

பிழை? திருத்தம்/// பற்றுக்கோடு*
பசியார? பசியாற/// பசி ஒரு வெப்பம்*
மனதாற? மனதார/// மனம் நிறைந்து வாழ்த்துதல்*

இனி, மனதாரப் பாடுவது என்பது

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!

என்பதைப் போல என்றும்

மனதாறப் பாடுவது என்பது

.......
செந்தமிழும் மாய்ந்ததுகாண் செந்தமிழர் செத்துவிட்டார்
எந்தவகை அன்னவர்தான் ஈடேறிப் போவாரோ?

தன்முயல்வும் இன்றி தனிச்சிறப்பும் ஒன்றின்றி
என்வகையும் தேராதார் எப்படித்தான் வாழ்வாரோ?

உள்ளுணர்வும் சாம்பி உயர்கருத்தும் மாய்ந்தொழிந்து
வெள்ளறிவே கொண்டிருப்பார் வீழ்ந்திறந்து போவாரோ?

கண்ணுருட்டிப் பார்ப்பார்தம் கால்வருடி நின்றிருப்பார்
எண்வகையாச் செம்பொருளை எப்படித்தான் காண்பாரோ?

கோலெடுப்பார் தம்முன் குரங்காய் நடமிடுவார்
நூலெடுத்துக் கற்றறிந்து நோற்றுயர்தல் எப்பொழுதோ?

வண்டியின்மேல் போவார்க்கே வாய்ப்பொத்திக் கைகூப்பி
மண்டியிட்டு வாழ்வார் மனந்திருத்தல் எப்பொழுதோ?

வீசுகின்ற சோற்றுக்கே வீங்கித் தவங்கிடப்பார்
மாசகன்ற நல்லறிவால் மாண்புபெறல் காண்குவமா?

நட்டுவைத்த கல்முன்னே நறும்படையல் வைத்தொடுங்கி
குட்டுவைத்துக் கொண்டெழுவார் கூன்கொள்கை மாய்ந்திடுமோ?

மக்களுக்குள் கோடி குலம்படைத்து மாண்பழிக்குஞ்
சிக்கல் அவிழ்ந்து சிறப்புவந்து வாய்த்திடுமா?

வாய்மொழியுந் திக்கி வருமொழிக்கும் பண்பிழப்பார்
தாய்மொழியைப் பேணி தரமுயர்தல் நேர்ந்திடுமா?

கண்ணிமைக்கும் நேரத்தில் கருத்திழக்கும் தீத்திறத்தார்
மண்ணமைக்கும் நல்லமைப்பில் மாண்புபெறல் காண்குவமா?
.......

பெருஞ்சித்திரனார்

போல என்றும் காண்க...


: எனவே உளமார, மனதார, வாயார வாழ்த்துவோம்..😊

 மனதாரவும் மனதாறவும் பாடுவோம்..


நமது கற்றல் தொடர்கிறது.

ரகர றகர வேறுபாட்டுச் சொற்கள்:

ஒரு - ஒன்றாகிய;
ஒறு - தண்டி
ஒருத்தல் - ஆண்யானை; ஒறுத்தல் - கோபித்தல்

கர - ஒளி;
கற - பால் கற
கரி - அடுப்புக்கரி, யானை; கறி - காய்கறி, கடி
கருத்து - எண்ணம்; கறுத்து - கோபித்து
கருவல் - கருப்பானது; கறுவல் - சினத்தல்
கருவி - ஆயுதம்; கறுவி - சினப்படு
கரை - ஓரம், கடற்கரை; கறை - குற்றம், மாசு
கரையான் - கடற்கரையில் உள்ளவன்; கறையான் - ஒரு வகை உயிர்மெய்
கவர் - பிடுங்கு ; கவறு - சூதாடுங்கருவி

 காரல் - ஒரு மீன்; காறல் - காறி உமிழ்தல்
கார் - முகில்; காறு - கொழு
கீரி - ஒரு உயிர்மெய்; கீறி - கிழித்து

கூர - நிறைய (தயை கூர்ந்து, அன்பு கூர்ந்து...); கூற - சொல்ல
கூரிய - கூர்மையான; கூறிய - சொல்லிய
கூரை - வீட்டின் கூரை; கூறை - ஒரு வகை சேலை
கோரல் - விரும்புதல், வேண்டுதல் (கோரிக்கை); கோறல் - கொலை செய்தல்
(கோறுகிறேன் என்றால் கொலை செய்கிறேன் என்று பொருள்)


: இனி,
சாரு - சார்ந்திரு, கிளி; சாறு - இரசம்
சிரை - தலையைச் சிரை; சிறை - காவல்
சீரிய - பெருமை பொருந்திய; சீறிய - வெகுண்டெழுந்த, கோபித்த
சுரா - கள்; சுறா- ஒருவகை மீன்
சுருக்கு - சுருங்கச் செய் (உண்டி சுருக்கு); சுறுக்கு - விரைவு (இந்த வழி போனா சுறுக்க போயிரலாம் என்ற ஊர் வழக்கு ஓர்க)

 சிரம் என்பது வடமொழி சிரசு என்பதே... தமிழில் தலை, சென்னி..(சிரச்சேதம் - தலைத்துண்டிக்கும் தண்டம்)

சுவர் - மதில்: சுவறு - வற்று (சுவறிடும் மூப்பைச் சுமந்து...)

 சுவற்றில்? சுவரில்///

சுரா - கள்;
சுறா- ஒருவகை மீன்

சுவர் - மதில்: சுவறு - வற்று (சுவறிடும் மூப்பைச் சுமந்து...)
சுவற்றில்? சுவரில்///
சூரல் - பிரம்பு; சூறல் - குடைதல், தோண்டுதல்
சூறைக்காற்று, சூறைத்தேங்காய், சூறைக்காற்று, சூறையாடினர், சூறாவளி அனைத்தும் றகரம் வரும் சொற்களே...

 செரித்தல் - உண்ட உணவு செரித்தல், செமித்தல் என்பது மருவு; செறித்தல் - செறிவு அடைதல், நெருக்குதல்
செரு - போர் (செருக்கு - படைச்செருக்கு) ;  செறு - வயல்,(செறுநர் - பகைவர்)

செய்க பொருளை செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனில் கூரியது இல். #759

சேரல் - கிட்டல், ஒன்று சேர்த்தல், புணர்தல்; சேறல் - செல்லுதல்.
சொரி - பொழி; சொறி - ஒரு தோல் நோய்

 கரிதல் - கருகுதல், தீய்தல்,
கரித்தல்- உறுத்துதல் (கண்ணில் மை கரிக்கிறது என்றாளாம்), எரித்தல் (கரிச்சுக் கொட்டாதே);
 கறித்தல் - கடித்துத் தின்னுதல் (கற கறன்னு இல்ல, நமத்துப் போச்சு)

தரி - அணிந்து கொள்; தறி - வெட்டு, தூண்..  கட்டுத்தறி (கட்டிவைக்க உதவும் தூண்... கம்பன்வீட்டுக் கட்டுத்தறியும் பாடும்)

தரு - (சமற்கிருதம் - மரம்); தறு - இறுக விடு - தறுகண்- அஞ்சாமை, கொடுமை, தறுதலை - அடங்காதவன்...

 தவரு? தவறு///
திரம் - நிலை ; திறம் - வல்லமை
திரை - அலை; திறை - கப்பம்

 துரவு - கிணறு, கேணி; துறவு - துறத்தல், துறவியர் அறம்
துரத்தல் - செலுத்துதல் , துரத்துதல் - ஓட்டிச் செலுத்துதல், எய்தல், போக்குதல், வீசுதல், வெருட்டுதல், அப்புறப்படுத்துதல்; துறத்தல் - நீக்குதல்.

துரு - இரும்பில் பிடிக்கும் துரு;
துறு - நெருங்கு
துருவல் - தேடுதல் ; துறுவல் - நெருங்கல்

துரை -ஆங்கிலம் -சீமைத்துரை; துறை - படித்துறை, வழி, நீதித்துறை
தூர் - வண்டல், நிரப்பு; தூறு - பழிச்சொல்; தூற்று - பழிசொல்லு, திட்டு
தெரிதல் -விளக்கமாதல், அறிதல்; தெரித்தல் - சொல்லுதல்:
 தெறித்தல் - துள்ளுதல்,
தேர - ஆராய; தேற- குணமடைய
தேர் - ஒரு வண்டி; தேறு - தெளிவு, தெளிவடை


நருக்கு - நசுக்கு; நறுக்கு - துண்டி (நறுக்குனு பேசாதே)
நரை - வெண்மயிர்; நறை - மணம்
நிருத்தம்? நிறுத்தம்///
நிரை - வரிசை (நிரல் நிரை) ; நிறை- நிறைவு
நீர் - தண்ணீர், வெந்நீர்...; நீறு - சாம்பல், திருநீறு
நெரி - நொறுங்கு, தகர் ; நெறி - வழி, கொள்கை


பரந்த - பரவிய; பறந்த - பறவை பறந்த..
பரவை - கடல்; பறவை - பறக்கும் உயிர்மெய்
பரி - தாங்கு, குதிரை; பறி - பிடுங்கு
பரை - உமை; பறை - இசைக்கருவி
பாரை - கடப்பாரை; பாறை - கற்பாறை

 பிரதேசம் - சமற்கிருதம்- இடம்: பிறதேசம்- அந்நிய நாடு

பிரை - மோர்ப்பிரை (இதுவே புரை ஊத்து என்று மருவி நிற்கின்றது);  பிறை- இளநிலா.

புரணி - ஊன் (இறைச்சி உணவு, மாமிசம் - சமற்கிருதம்); புறணி - புறங்கூறல்
புரம் - பட்டணம்;
புறம் - தமிழர் வாழ்வின் ஒரு பகுதியாகிய திணை ஒழுக்கம், பக்கம் (அப்புறம், இப்புறம், உட்புறம், வெளிப்புறம்)

பெரு - பெரிய; பெறு - அடை
பேர் - பெயர்; பேறு - பெறுதற்கரியதைப் பெறுதல்
பொரி - நெற்பொரி; பொறி - எந்திரம்
பொரித்தல் - பொரியச் செய்தல்; பொறித்தல் - சித்திரம் எழுதுதல்
பொரு - போர் செய்; பொறு - பொறுத்துக்கொள் (வெயிட் பண்ணு என்ற இக்காலத்தின் பண்ணி மொழியை பொறு என்று சொல்லி விலக்கலாம்)

 பொருப்பு - மலை; பொறுப்பு - கடமை

மரம் - ஒரு நிலத்திணை (ஆலமரம், அரசமரம்...): மறம் - கோபம், வீரம்
மரி - சாகு;
மறி - ஆட்டுக்குட்டி
மரு - மணம்; மறு - குற்றம்
மருகி - மருமகள் ;
மறுகி - மயங்கி

 மாரி - மழை, முகில்; மாறி - மாறுதலடைந்து
முரி - ஒடி; முறி - தளிர்
முருக்கல் - உருக்கல்; முறுக்கல் - திருகுதல்
முருக்கு - ஒருவகை மரம்; முறுக்கு - தின்பண்டம்
 மெய்யுரை - உண்மைச்சொல்;
மெய்யுறை - உடம்பைக் காக்கும் காப்பணி

வருத்தல் - துன்பப்படுத்துதல்; வறுத்தல் - காய்களை வறுத்தல்

வரை - எல்லை, மலை (அதுவரை,இதுவரை, வரையறை);
வறை - துவட்டற்கறி

 விரகு? விறகு///
விரலி - நீண்ட விரலையுடையவள்;
விறலி - கருத்து வெளிப்பட நடிப்பவள்
விரல் - கைவிரல்: விறல் - வலிமை
விரைத்தல் - விதைத்தல்; விறைத்தல் - மரத்துப் போதல்
 வீரி - பெண்தெய்வம்: வீறி - ஓங்கி

வெரு - அஞ்சு; வெறு - வெறுப்பு அடை
வேர்- நிலத்திணையின் சினை; வேறு - பிறிது


ரகர, றகர சொற்களின் வேறுபாடுகள்

இரத்தல் - யாசித்தல்
இறத்தல் - செத்துப் போகுதல்

உரி - கழற்று/ தோலை உரி
உறி - தூக்குச் சட்டி

ஒரு - ஒன்று
ஒறு - தண்டனைக் கொடு
மேலும் படிக்க »