ரகர றகர வேறுபாட்டுக் குறிப்புகள்: பிழை கடிதல்


அன்பு நண்பர்களுக்கு வணக்கம்...

எழுத்துப் பிழைகளும் திருத்தங்களும் என்ற தலைப்பில் இன்று முதல் ஆறு நாட்களுக்கு பதிவுகள் வரவேற்கப்படுகின்றன...

பெரும்பாலும் எழுத்துப் பிழைகளும் சொற்பிழைகளும் கீழ்காணும் பிரிவுகளில் அடக்கி விடலாம். அவையாவன

1. ரகர றகர வேறுபாடு (எ.டு - கருப்பா? கறுப்பா?; பயிற்ச்சியா பயிற்சியா? பயிர்ச்சியா?; வரையரையா? வறையரையா? வரையறையா? என்பன போன்ற குழப்பங்களால் வரும் பிழைகள்.

2. லகர ழகர ளகர வேறுபாடு: (எ.டு: கலை, களை, கழை...)

3. நகர னகர ணகர வேறுபாடு: (என்னாள் என்பதா எந்நாள் என்பதா?)

4. மரபு வழுக்கள் (எ-டு: தென்னங்கன்றா? தென்னஞ்செடியா? தென்னம்பிள்ளையா?)

5. புணர்ச்சி (எ-டு: கயிறு கட்டிலா? கயிற்றுக்கட்டிலா? கயிறுக்கட்டிலா?)

6. ஒருமை பன்மைப் பெயர்கள் (கிளிக்களா, கிளிகளா, கிளிகள் பறந்தது சரியா, கிளிகள் பறந்தன சரியா?)

7. சமற்கிருதச் சொற்களால் வரும் குழப்பங்கள் (எ-டு: கர்ப்பம் கர்பம், கருப்பம் எது சரி?...)

இவ்வேழு பிரிவுகளில் பெரும்பான்மை பிழைகளை வகைப்படுத்திக் கொள்வோம். பின்னர் ஒவ்வொன்றாக விரிவாகப் பார்ப்போம் என்பதே வரும் கிழமைக்கான திட்டம் என்க...

ரகர றகர வேறுபாடு குறிப்புகள்:

(ரகரம் - இடையினம்
றகரம் - வல்லினம்)

🌸 குறிப்பு 1.

றகர மெய் தன் உயிர்மெய்யோடு (றகர உயிர்மெய்யோடு) சேர்ந்து வரும்; ரகர மெய் தன் உயிர்மெய்யோடு (ரகர உயிர்மெய்யோடு) சேர்ந்து வாரா.

எ-டு: குற்றம், விற்றான், புற்று, நெற்றி....

 🌸  குறிப்பு 2.:

றகரம், னகர மெய்க்குப் பின் வரும்; ரகரம் னகர மெய்க்குப் பின் வாரா.

எ-டு: குன்றம், தின்றான், பன்றி, கன்று, கொன்றை, சான்றோர்

றகரத்திற்கு னகரம் இனம் ஆகும். அதனால்தான் நெடுங்கணக்கில் றகரமும் னகரமும் அடுத்தடுத்து வைக்கப்பட்டுள்ளன. அதாவது, றகரமும் னகரமும் அக்காள் தங்கை என்று நினைவிற் கொள்க... இனவெழுத்துக்களைப் பற்றி எழுத்ததிகாரத்தில் நாம் கண்டதை ஓர்க..

 🌸 குறிப்பு 3.

றகரமும் சரி ரகரமும் சரி சொல்லின் முதல் எழுத்தாக வாரா.

எ-டு:
(பிழை? திருத்தம்/// பற்றுக்கோடு*)

ரங்கன்?  அரங்கன்/// அரங்கம்*

ராமன்? இராமன்///

ரோமம்? உரோமம்///

 🌸  குறிப்பு 4.

றகர மெய் ஒரு சொல்லின் ஈற்றெழுத்தாக வாரா. ரகர மெய் வரும்.

எ-டு: நீர், வேர், பார்,...

ரகர றகர வேறுபாடு குறிப்புகள்:

(ரகரம் - இடையினம்
றகரம் - வல்லினம்)

🌸 குறிப்பு 1.

றகர மெய் தன் உயிர்மெய்யோடு (றகர உயிர்மெய்யோடு) சேர்ந்து வரும்; ரகர மெய் தன் உயிர்மெய்யோடு (ரகர உயிர்மெய்யோடு) சேர்ந்து வாரா.

எ-டு: குற்றம், விற்றான், புற்று, நெற்றி....

 🌸  குறிப்பு 2.:

றகரம், னகர மெய்க்குப் பின் வரும்; ரகரம் னகர மெய்க்குப் பின் வாரா.

எ-டு: குன்றம், தின்றான், பன்றி, கன்று, கொன்றை, சான்றோர்

றகரத்திற்கு னகரம் இனம் ஆகும். அதனால்தான் நெடுங்கணக்கில் றகரமும் னகரமும் அடுத்தடுத்து வைக்கப்பட்டுள்ளன. அதாவது, றகரமும் னகரமும் அக்காள் தங்கை என்று நினைவிற் கொள்க... இனவெழுத்துக்களைப் பற்றி எழுத்ததிகாரத்தில் நாம் கண்டதை ஓர்க..

 🌸 குறிப்பு 3.

றகரமும் சரி ரகரமும் சரி சொல்லின் முதல் எழுத்தாக வாரா.

எ-டு:
(பிழை? திருத்தம்/// பற்றுக்கோடு*)

ரங்கன்?  அரங்கன்/// அரங்கம்*

ராமன்? இராமன்///

ரோமம்? உரோமம்///

 🌸  குறிப்பு 4.

றகர மெய் ஒரு சொல்லின் ஈற்றெழுத்தாக வாரா. ரகர மெய் வரும்.

எ-டு: நீர், வேர், பார்,...

🌸 குறிப்பு 5.

னகர மெய்யை ஈற்றிலுடைய சொற்களும் லகர மெய்யை ஈற்றிலுடைய சொற்களும் நிலைமொழியாய் நிற்க, வல்லெழுத்து வருமொழியாய் வரின் றகரம் தோன்றும். ரகரம் தோன்றா.

எ-டு: பொன் + கொல்லன் = பொற்கொல்லன்
 கல் + சட்டி = கற்சட்டி
 பல் + பொடி = பற்பொடி

🌸 குறிப்பு 6:

றகர மெய்க்குப் பின் (ற் எனும் மெய்யெழுத்துக்குப் பின்), க, ச, ப, ற என்னும் நான்கு உயிர்மெய்கள் மட்டுமே வரும். மற்றவை வாரா.

எ-டு: நிற்க, முயற்சி, வெற்பு, உற்றார்

ரகர மெய்க்குப் பின் (ர் எனும் மெய்யெழுத்துக்குப் பின்) க, ங, ச, ஞ, த, ந, ப, ம,ய,வ எனும் இப்பத்து உயிர்மெய்களும் வரும். மற்றவை வாரா...(ட, ண, ர, ல, ழ, ள, ற, ன எனும் உயிர்மெய்கள் வாரா)

எ-டு: வேர்கடிது, வேர்சிறிது, வேர்தீது, வேர்நீண்டது, வேர்பெரிது, வேர்மாண்டது, வேர்வலிது, வேர்யாது.

ரகர றகர வேறுபாட்டுக் குறிப்புகள்:

🌺 குறிப்பு 7:

 ரகர மெய், தனி உயிர்க் குற்றெழுத்தின் பின்னாவது, தனி உயிர்மெய்க் குற்றெழுத்தின் பின்னாவது நில்லாது. றகரம் அவ்வாறு நிற்கும்

தனி உயிர்க் குற்றெழுத்து - அ, இ, உ, எ, ஒ
தனி உயிர்மெய் குற்றெழுத்து - க, கி, கு, கெ, கொ, ச, சி, சு.....முதலியன

எ-டு: உற்றார், சுற்றார்

அர்ச்சனை, கர்ப்பம், தர்ப்பை என்பன இவ்விதிப்படி தவறு என்பது காண்க. இவை தமிழல்ல என்பதை தமிழே காட்டிவிட்டதென்க...

அர்ச்சனை? அருச்சனை///
கர்ப்பம்? கருப்பம்///
தர்ப்பை? தருப்பை///

 🌺 குறிப்பு 8:

றகர மெய்ய்க்குப் பின் மெய்யெழுத்து வராது. வராது. வராது. உயிர்மெய் மட்டுமே வரும்.

பயிற்ச்சி? பயிற்சி///
வரவேற்ப்பு? வரவேற்பு///
வரவேற்பிற்க்கு? வரவேற்பிற்கு///
அதற்க்கு? அதற்கு///

ரகர மெய்க்குப்பின் மெய்யும் வரும், உயிர்மெய்யும் வரும்

எ-டு: ஆர்க்கும், அயர்ச்சி, தேர்வு

🌺  குறிப்பு 9:

றகரம் தமிழ் மொழிக்கே சிறப்பானது. ரகரம் பல மொழிகளில் உண்டு
எ-டு: பிராமணர் (வடமொழி)
 அலமாரி (போர்த்துக்கேசியம்)
 கரம் = சூடு (இந்துசுதானி)
 பிரின்சிபால் = தலைவர் (ஆங்கிலம்)
எனவே ரகரம் கொண்ட பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுத வேண்டி வந்தால் றகரம் இடாது ரகரமே இட வேண்டும்.

🌺 குறிப்பு 10:

றகரம் வரப்பெற்ற தமிழ்ச்சொற்கள் அழுத்தமான ஓசையை உடையனவாய் இரு
க்கும். ரகரம் வரப்பெற்ற தமிழ்ச்சொற்கள் வன்மையோசையும் மென்மையோசையும் அல்லாத நடுத்தர ஓசையினை உடையதாக இருக்கும்

எ-டு:
அரு - அருமை; அறு - துண்டி
அரை - பாதி; அறை - அடி
இரத்தல் - யாசித்தல்; இறத்தல் - சாதல்
இரங்கு - மனமிரங்கு; இறங்கு - கீழே இறங்கு


ரகர றகர வேறுபாடு:


அரம் - ஓர் ஆயுதம்; அறம் - நன்மைகளின் மொத்தவுருவாகத் தமிழர் மேற்கொள்ளும் வாழ்க்கைமுறை (இல்லறம், துறவறம்)
அரமனை - அரசன் வீடு; அறமனை - அறச்சாலை
அரி - திருமால்; அறி - அறிந்துகொள்
அரிவை - பெண்; அறிவை - அறிவாய்
அரு - அருமையான; அறு - துண்டி
அருகு - நெறுக்கம்; அறுகு - அறுகம்புல்
அருவி - மலையருவி; அறுவி - அறச்செய்
அரை - பாதி; அறை - வீட்டின் அறை, கன்னத்தில் அறை
அலரி - ஒருவகைப் பூ; அலறி - கதறி

ஆர - நிறைய; ஆற - தணிய
ஆரல் - ஒருவகை மீன் ; ஆறல் - தணிதல்

 இர - யாசி; இற - சாகு, கட
இரகு - ரகு என்ற பெயர்; இறகு - பறவையின் சிறகு
இரங்கு - மனமிரங்கு; இறங்கு - கீழிறங்கு
இரத்தல் - பிச்சையெடுத்தல்; இறத்தல் - சாதல், கடத்தல் (கட என்றால் தாண்டிச் செல் என்பது பொருள்)
இரவு - இராத்திரி,
இறவு - சாதல்
இரு - உட்கார்;
இறு - வடிகட்டு, ஒடி (இரண்டும் வினைச்சொற்கள்)
இரு - இரண்டு
இருக்கு - ஆரிய வேதம்; இறுக்கு - அழுந்தக் கட்டு
இருப்பு - நிலைமை (கையிருப்பு);
இறுப்பு - குடியிறை, தங்குதல், கடன் செலுத்துதல்.
இரும்பு - இரும்பு; இறும்பு - சிறுமலை, வியப்பு (இறும்பூது)
இரை - உணவு;
இறை - கடவுள், அரசன், வரி
ஈர் - இழு (ஈர்ப்பு);
ஈறு - முடிவு, கடைசி எழுத்து;
 ###
உரல்- உரல்; உறல் - அடைதல்
உரவு - வலிமை; உறவு - சொந்தம்
உரி - பட்டை; உறி - பண்டங்கள் வைக்கும் தூக்கு (உறியடித்தல்)
உரிய - உரிமையான; உறிய - உறிஞ்ச
உரு - உருவம்; உறு - பொருந்து, ஓர் உரிச்சொல்
உருக்கு - இளகச்செய்; உறுக்கு - கோபி
உருமு - இடி; உறுமு - உறுமுதல், அரிமா எழுப்பும் ஒலி (அரிமா - சிங்கம்)
   உரை - சொல், தேய் (உரைகல்), பாட்டுரை; உறை - பை, மூடிவைக்கும் பொருள்.

ஊர - நகர, பரவ;
ஊற - சுரக்க (ஊற்று)
எரி - தீ; எறி - வீசு
ஏரி - பெரிய குளம்;
ஏறி - மேல் ஏறி

கரி - அடுப்புக்கரி, கரிய- கருப்பு நிறத்ததான, கருமை, கரிக்கட்டை , கரிதல் - தீய்ததல், கரிச்சாங்குருவி, கரி நாள், கரிபூசு, கரிசல், கரும்பு, கரிய, கரியமான், கருகல், கருக்கம் - கார்மேகம், கருங்குரங்கு, கருநாகம், கருமணி - கணணின் கருப்பு விழி, கருமயிர், கருமுகில் என கருமையைக் குறிக்கும் எண்ணற்ற சொற்கள் இடையின ரகரத்தையே ஆண்டு வருதல் காண்க...

ஆயினும், கறுப்பு என்று சொல்வது பெருவழக்கு ஆகிவிட்டமையால் கறுப்பு என்பதை நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டோம். எனவே கறுப்பு என்பதும் சரி என்றே கொள்க....

வேறு அனைத்து கருமை சார்ந்த பயன்பாட்டுக்கும் றகரம் இடாது ரகரமே இடவேண்டும் என்றோர்க....

🌸🌸🌸🌸🌸🌸

சபையில் சான்றோருக்கு ஒரு தாழ்மையான கேள்வி.

கேள்வி இதுதான்....

கருமை சார்ந்த அனைத்து பயன்பாடுகளுக்கும் ரகரமே வரும்போது கறுப்பு என்ற ஒரு சொல்லுக்கு மட்டும் றகரம் வந்தது சிலரது பிழையாலேயே என்பது தெளிவு... இதனை நாம் ஏற்றுக்கொள்வதா? எதிர்ப்பதா? என்பதே கேள்வி....

 கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள்...

என்று தொல்காப்பியமும் கறுப்பு என்பது கறுவுதல் கோபப்படுதல் என்றே காட்டுகிறது...

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள். - 312

என்ற குறளிலும் கறுத்து என்பது கறுவு கொண்டு என்ற பொருளிலேயே வந்துள்ளது...

தமிழில் 'கறுமை' என்ற சொல் 'கரிய' என்ற பொருளில்  இல்லாமையால், 'கருமை' என்றே வழங்குதலால், விடை கிடைக்கும் வரை, கரிய நிறத்தை கருமை என்றும் கருப்பு என்றுமே நாம் வழங்குவோம்.....

ரகர றகர வேறுபாட்டுச் சொற்கள் சிலவற்றை நேற்று கண்டோம்.
இவற்றுள் சில சொற்களுக்கு ரகர றகரத்தை மாற்றிப் போட்டு எழுதினால், பொருள் தலைகீழாகக் கூட மாறக்கூடும் என்பதால் இவ்வேறுபாட்டுச் சொற்களைப் படித்தும், மனதில் அசை போட்டும், பிரித்து உணர்ந்தும், ஒரு சொற்றொடராக்கிப் பார்த்தும், ஒலித்தும் பழகிக்கொள்வது மிகவும் தேவை.

 எழுத்துப் பிழைகள் வருவது இயல்பே. அவ்வெழுத்துப் பிழைகள் இரு வகைப்படும்.

ஒன்று, நாம் எழுதும் போதே இது சரியா தவறா என்ற குழப்பத்தைத் தோற்றுவிக்கும் பிழைகள்... இதைச் சரி செய்வது எளிது.. ஏனென்றால் கேள்வி நமக்குத் தோன்றிவிட்டது. விடையை சிறு முயற்சி மூலம் கண்டு கொள்ளலாம்.

மற்றொன்று, நாம் எழுதும்போது இது தவறா என்று தோன்றாது நாம் சரியே என்று நினைத்து எழுதும் பிழைகள். இதைச் சரி செய்வது கடினம். ஏனென்றால் நமக்கு இங்குதான் கேள்வியே தெரியாதே, பிறகு எப்படி விடை கண்பது..
இதற்காகவே இந்த ரகர றகர வேறுபாட்டுச் சொற்களை இங்கு வரிசைப் படுத்தி பொருளோடு இடப்படுகின்றன என்றோர்க.
 எடுத்துக்காட்டுக்கு ஒரு சொற்றொடர்...


"பசியார உணவளித்த உங்களை மனதாற வாழ்த்துகின்றேன"
மேலே உள்ள உணர்வு பொங்கும் சொற்றொடரில் உள்ள ஒரு பிழை, அச்சொற்றொடரின் பொருளைத் தலைகீழாக மாற்றிவிடுகின்றது பாருங்கள்.

நேற்றைய பாடத்தில் கண்டபடி

ஆர- நிறைய; ஆற - தணிய

பசி என்பது வயிற்றின் வெப்பம். அது உணவுண்டால் தணிகிறது. எனவே பசியாற என்பதும் பசியாற்று என்பதும் பசி என்னும் வெப்பத்தை தணித்தல் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பசியார என்றால் நீங்கள் சரியாக சோறு போடவில்லை, என் பசியை நிறையச் செய்து விட்டீர்கள் என்றல்லவா பொருள் தலைகீழாகிறது...

அதேபோல, ஒருவரை வாழ்த்தும்போது மனம் வெப்பமாகவா இருக்கும்? மனம் வெப்பமாக இருந்தால் ஒருவரை வாழ்த்த முடியுமா? முடியாது. திட்டத் தான் முடியும். வாழ்த்தும்போது மனம் நிறைந்து போகிறதன்றோ? நிறைவடைகிறதன்றோ? இந்த நிறைவுப் பொருளைத் தரும் ஆர என்ற சொல்லைத் தான் நாம் மனதார, வாயார, உளமார வாழ்த்துகிறேன் என்று சொல்கிறோம்.

எனவே

பிழை? திருத்தம்/// பற்றுக்கோடு*
பசியார? பசியாற/// பசி ஒரு வெப்பம்*
மனதாற? மனதார/// மனம் நிறைந்து வாழ்த்துதல்*

இனி, மனதாரப் பாடுவது என்பது

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!

என்பதைப் போல என்றும்

மனதாறப் பாடுவது என்பது

.......
செந்தமிழும் மாய்ந்ததுகாண் செந்தமிழர் செத்துவிட்டார்
எந்தவகை அன்னவர்தான் ஈடேறிப் போவாரோ?

தன்முயல்வும் இன்றி தனிச்சிறப்பும் ஒன்றின்றி
என்வகையும் தேராதார் எப்படித்தான் வாழ்வாரோ?

உள்ளுணர்வும் சாம்பி உயர்கருத்தும் மாய்ந்தொழிந்து
வெள்ளறிவே கொண்டிருப்பார் வீழ்ந்திறந்து போவாரோ?

கண்ணுருட்டிப் பார்ப்பார்தம் கால்வருடி நின்றிருப்பார்
எண்வகையாச் செம்பொருளை எப்படித்தான் காண்பாரோ?

கோலெடுப்பார் தம்முன் குரங்காய் நடமிடுவார்
நூலெடுத்துக் கற்றறிந்து நோற்றுயர்தல் எப்பொழுதோ?

வண்டியின்மேல் போவார்க்கே வாய்ப்பொத்திக் கைகூப்பி
மண்டியிட்டு வாழ்வார் மனந்திருத்தல் எப்பொழுதோ?

வீசுகின்ற சோற்றுக்கே வீங்கித் தவங்கிடப்பார்
மாசகன்ற நல்லறிவால் மாண்புபெறல் காண்குவமா?

நட்டுவைத்த கல்முன்னே நறும்படையல் வைத்தொடுங்கி
குட்டுவைத்துக் கொண்டெழுவார் கூன்கொள்கை மாய்ந்திடுமோ?

மக்களுக்குள் கோடி குலம்படைத்து மாண்பழிக்குஞ்
சிக்கல் அவிழ்ந்து சிறப்புவந்து வாய்த்திடுமா?

வாய்மொழியுந் திக்கி வருமொழிக்கும் பண்பிழப்பார்
தாய்மொழியைப் பேணி தரமுயர்தல் நேர்ந்திடுமா?

கண்ணிமைக்கும் நேரத்தில் கருத்திழக்கும் தீத்திறத்தார்
மண்ணமைக்கும் நல்லமைப்பில் மாண்புபெறல் காண்குவமா?
.......

பெருஞ்சித்திரனார்

போல என்றும் காண்க...


: எனவே உளமார, மனதார, வாயார வாழ்த்துவோம்..😊

 மனதாரவும் மனதாறவும் பாடுவோம்..


நமது கற்றல் தொடர்கிறது.

ரகர றகர வேறுபாட்டுச் சொற்கள்:

ஒரு - ஒன்றாகிய;
ஒறு - தண்டி
ஒருத்தல் - ஆண்யானை; ஒறுத்தல் - கோபித்தல்

கர - ஒளி;
கற - பால் கற
கரி - அடுப்புக்கரி, யானை; கறி - காய்கறி, கடி
கருத்து - எண்ணம்; கறுத்து - கோபித்து
கருவல் - கருப்பானது; கறுவல் - சினத்தல்
கருவி - ஆயுதம்; கறுவி - சினப்படு
கரை - ஓரம், கடற்கரை; கறை - குற்றம், மாசு
கரையான் - கடற்கரையில் உள்ளவன்; கறையான் - ஒரு வகை உயிர்மெய்
கவர் - பிடுங்கு ; கவறு - சூதாடுங்கருவி

 காரல் - ஒரு மீன்; காறல் - காறி உமிழ்தல்
கார் - முகில்; காறு - கொழு
கீரி - ஒரு உயிர்மெய்; கீறி - கிழித்து

கூர - நிறைய (தயை கூர்ந்து, அன்பு கூர்ந்து...); கூற - சொல்ல
கூரிய - கூர்மையான; கூறிய - சொல்லிய
கூரை - வீட்டின் கூரை; கூறை - ஒரு வகை சேலை
கோரல் - விரும்புதல், வேண்டுதல் (கோரிக்கை); கோறல் - கொலை செய்தல்
(கோறுகிறேன் என்றால் கொலை செய்கிறேன் என்று பொருள்)


: இனி,
சாரு - சார்ந்திரு, கிளி; சாறு - இரசம்
சிரை - தலையைச் சிரை; சிறை - காவல்
சீரிய - பெருமை பொருந்திய; சீறிய - வெகுண்டெழுந்த, கோபித்த
சுரா - கள்; சுறா- ஒருவகை மீன்
சுருக்கு - சுருங்கச் செய் (உண்டி சுருக்கு); சுறுக்கு - விரைவு (இந்த வழி போனா சுறுக்க போயிரலாம் என்ற ஊர் வழக்கு ஓர்க)

 சிரம் என்பது வடமொழி சிரசு என்பதே... தமிழில் தலை, சென்னி..(சிரச்சேதம் - தலைத்துண்டிக்கும் தண்டம்)

சுவர் - மதில்: சுவறு - வற்று (சுவறிடும் மூப்பைச் சுமந்து...)

 சுவற்றில்? சுவரில்///

சுரா - கள்;
சுறா- ஒருவகை மீன்

சுவர் - மதில்: சுவறு - வற்று (சுவறிடும் மூப்பைச் சுமந்து...)
சுவற்றில்? சுவரில்///
சூரல் - பிரம்பு; சூறல் - குடைதல், தோண்டுதல்
சூறைக்காற்று, சூறைத்தேங்காய், சூறைக்காற்று, சூறையாடினர், சூறாவளி அனைத்தும் றகரம் வரும் சொற்களே...

 செரித்தல் - உண்ட உணவு செரித்தல், செமித்தல் என்பது மருவு; செறித்தல் - செறிவு அடைதல், நெருக்குதல்
செரு - போர் (செருக்கு - படைச்செருக்கு) ;  செறு - வயல்,(செறுநர் - பகைவர்)

செய்க பொருளை செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனில் கூரியது இல். #759

சேரல் - கிட்டல், ஒன்று சேர்த்தல், புணர்தல்; சேறல் - செல்லுதல்.
சொரி - பொழி; சொறி - ஒரு தோல் நோய்

 கரிதல் - கருகுதல், தீய்தல்,
கரித்தல்- உறுத்துதல் (கண்ணில் மை கரிக்கிறது என்றாளாம்), எரித்தல் (கரிச்சுக் கொட்டாதே);
 கறித்தல் - கடித்துத் தின்னுதல் (கற கறன்னு இல்ல, நமத்துப் போச்சு)

தரி - அணிந்து கொள்; தறி - வெட்டு, தூண்..  கட்டுத்தறி (கட்டிவைக்க உதவும் தூண்... கம்பன்வீட்டுக் கட்டுத்தறியும் பாடும்)

தரு - (சமற்கிருதம் - மரம்); தறு - இறுக விடு - தறுகண்- அஞ்சாமை, கொடுமை, தறுதலை - அடங்காதவன்...

 தவரு? தவறு///
திரம் - நிலை ; திறம் - வல்லமை
திரை - அலை; திறை - கப்பம்

 துரவு - கிணறு, கேணி; துறவு - துறத்தல், துறவியர் அறம்
துரத்தல் - செலுத்துதல் , துரத்துதல் - ஓட்டிச் செலுத்துதல், எய்தல், போக்குதல், வீசுதல், வெருட்டுதல், அப்புறப்படுத்துதல்; துறத்தல் - நீக்குதல்.

துரு - இரும்பில் பிடிக்கும் துரு;
துறு - நெருங்கு
துருவல் - தேடுதல் ; துறுவல் - நெருங்கல்

துரை -ஆங்கிலம் -சீமைத்துரை; துறை - படித்துறை, வழி, நீதித்துறை
தூர் - வண்டல், நிரப்பு; தூறு - பழிச்சொல்; தூற்று - பழிசொல்லு, திட்டு
தெரிதல் -விளக்கமாதல், அறிதல்; தெரித்தல் - சொல்லுதல்:
 தெறித்தல் - துள்ளுதல்,
தேர - ஆராய; தேற- குணமடைய
தேர் - ஒரு வண்டி; தேறு - தெளிவு, தெளிவடை


நருக்கு - நசுக்கு; நறுக்கு - துண்டி (நறுக்குனு பேசாதே)
நரை - வெண்மயிர்; நறை - மணம்
நிருத்தம்? நிறுத்தம்///
நிரை - வரிசை (நிரல் நிரை) ; நிறை- நிறைவு
நீர் - தண்ணீர், வெந்நீர்...; நீறு - சாம்பல், திருநீறு
நெரி - நொறுங்கு, தகர் ; நெறி - வழி, கொள்கை


பரந்த - பரவிய; பறந்த - பறவை பறந்த..
பரவை - கடல்; பறவை - பறக்கும் உயிர்மெய்
பரி - தாங்கு, குதிரை; பறி - பிடுங்கு
பரை - உமை; பறை - இசைக்கருவி
பாரை - கடப்பாரை; பாறை - கற்பாறை

 பிரதேசம் - சமற்கிருதம்- இடம்: பிறதேசம்- அந்நிய நாடு

பிரை - மோர்ப்பிரை (இதுவே புரை ஊத்து என்று மருவி நிற்கின்றது);  பிறை- இளநிலா.

புரணி - ஊன் (இறைச்சி உணவு, மாமிசம் - சமற்கிருதம்); புறணி - புறங்கூறல்
புரம் - பட்டணம்;
புறம் - தமிழர் வாழ்வின் ஒரு பகுதியாகிய திணை ஒழுக்கம், பக்கம் (அப்புறம், இப்புறம், உட்புறம், வெளிப்புறம்)

பெரு - பெரிய; பெறு - அடை
பேர் - பெயர்; பேறு - பெறுதற்கரியதைப் பெறுதல்
பொரி - நெற்பொரி; பொறி - எந்திரம்
பொரித்தல் - பொரியச் செய்தல்; பொறித்தல் - சித்திரம் எழுதுதல்
பொரு - போர் செய்; பொறு - பொறுத்துக்கொள் (வெயிட் பண்ணு என்ற இக்காலத்தின் பண்ணி மொழியை பொறு என்று சொல்லி விலக்கலாம்)

 பொருப்பு - மலை; பொறுப்பு - கடமை

மரம் - ஒரு நிலத்திணை (ஆலமரம், அரசமரம்...): மறம் - கோபம், வீரம்
மரி - சாகு;
மறி - ஆட்டுக்குட்டி
மரு - மணம்; மறு - குற்றம்
மருகி - மருமகள் ;
மறுகி - மயங்கி

 மாரி - மழை, முகில்; மாறி - மாறுதலடைந்து
முரி - ஒடி; முறி - தளிர்
முருக்கல் - உருக்கல்; முறுக்கல் - திருகுதல்
முருக்கு - ஒருவகை மரம்; முறுக்கு - தின்பண்டம்
 மெய்யுரை - உண்மைச்சொல்;
மெய்யுறை - உடம்பைக் காக்கும் காப்பணி

வருத்தல் - துன்பப்படுத்துதல்; வறுத்தல் - காய்களை வறுத்தல்

வரை - எல்லை, மலை (அதுவரை,இதுவரை, வரையறை);
வறை - துவட்டற்கறி

 விரகு? விறகு///
விரலி - நீண்ட விரலையுடையவள்;
விறலி - கருத்து வெளிப்பட நடிப்பவள்
விரல் - கைவிரல்: விறல் - வலிமை
விரைத்தல் - விதைத்தல்; விறைத்தல் - மரத்துப் போதல்
 வீரி - பெண்தெய்வம்: வீறி - ஓங்கி

வெரு - அஞ்சு; வெறு - வெறுப்பு அடை
வேர்- நிலத்திணையின் சினை; வேறு - பிறிது


ரகர, றகர சொற்களின் வேறுபாடுகள்

இரத்தல் - யாசித்தல்
இறத்தல் - செத்துப் போகுதல்

உரி - கழற்று/ தோலை உரி
உறி - தூக்குச் சட்டி

ஒரு - ஒன்று
ஒறு - தண்டனைக் கொடு