மரபு வழுக்கள் / மரபுத் தொடர்


மரபு வழுக்கள் / மரபுத் தொடர் இரண்டும் ஒரே பொருளா...?

வழு என்றால் குற்றம்....

மரபு வழு என்றால் மரபை ஒழுகாது எழுதுவது பேசுவது

மரபுத் தொடர் என்றால் மரபு இதுதான் என்று உணர்த்தும் தொடர்

எ-டு:

மரபு வழு - வாழைச்செடி
மரபுத்தொடர் - வாழைக்கன்று


இனி சில மரபு வழுக்களையும் அதற்கான திருத்தங்களையும் பார்ப்போம்......

 மரத்தை வெட்டு
தக்காளியை நறுக்கு

 தக்காளியை வெட்டு என்பது வழு... தவறு...

 விறகுகளைக் கட்டு
பூக்களைத் தொடு

பூக்களைக் கட்டு என்பது வழு... அதாவது தவறு... கட்டுவது என்பது கடினமான பொருட்களையே...

பூவைத் தொடுக்க வேண்டும் என்ற தமிழின் நுட்பம் காண்க....

 〰〰〰

 கீற்று/பத்து    தேங்காய் பத்து கொஞ்சம் குடு.... பூசணிக்காயை கீற்று கீற்றாய் நறுக்கி வை


விறகை எரி
குப்பையைக் கொளுத்து
விளக்கை ஏற்று

விளக்கைக் கொளுத்து என்றால் அது வழு....



நுங்கினைச் சீவு
இளநீரைச் சீவு
தலையை வாரு...

தலையைச் சீவு என்பது வழு... நுங்கு வெட்டிக் குடு என்பதும் வழு....

ஒரே காம்பில் திரண்டிருக்கும் பூவை கொத்து என்றும் பழத்தை குலை என்றும் அழைத்தல் மரபு...

ஓன்று - பல:

பூ - கொத்து
பழம் - குலை
மரம் - தோப்பு
வெவ்வேறு மரங்கள் - சோலை
ஆடு - மந்தை
மனிதன் - கூட்டம்
யானை - பந்தி
மலை - தொடர்
கல் - குவியல், கற்குவியல்
நாற்று - முடி
மயிறு - கற்றை
கடை - சந்தை

 〰〰〰〰

கற்களை ஓர் இடத்தில் திரட்டும்போது பரப்பிப்போட மாட்டார்கள குவித்தே போடுவார்கள், எனவே கற் குவியல். யானைகள் ஒன்று சேரும்போது வரிசை வரிசையாகவே சேரும். எனவே யானைப் பந்தி. விறகைத் திரட்டி உறுதியான கயிற்றால் (கொடியால்) இறுக்கிக் கட்டுகிறோம் எனவே விறகுக் கட்டு. நாற்றை அப்படி இறுக்கிக் கட்டினால் சிதைந்து போகும். எனவே மெதுவாக அவைகளில் சில நாற்றுகளைக் கொண்டே மென்மையாக முடிந்து வைக்கிறார்கள். ஆகவே அது நாற்று முடி.

 〰〰〰〰〰

செயல்களின் அடிப்படையில் மட்டுமல்லாது வடிவம் பருவம் என்னும் அடிப்படையிலும் சொல்லாட்சி அமைய வேண்டும்.

ஓர் இலையின் பல்வேறு பருவங்களைத்
தளிர்
இலை
பழுப்பு
சருகு

என்னும் வேறு வேறு சொற்களால் குறிக்கிறோம். இந்தச் சொற்களைச் சொன்னவுடனேயே நமக்கு அதன் தோற்றமும் விளங்கிவிடுகிறது.

 அரும்பு
முகை
மொட்டு
மலர்
அலர்
வீ
செம்மல்

என்னும் சொற்கள் நமக்குப் புதுமையாகத் தோன்றும். ஆனால் நமது முன்னோர்கள் மலரின் பல்வேறு பருவங்களை இந்தத் தனித்தனிச் சொற்களாலேயே குறித்து வந்தார்கள். மலரும் பருவத்தில் உள்ள பூவையே மலர் என்றார்கள். நன்றாக விரிந்தது அலர். அலர்ந்து வாடிய தோற்றத்தில் இருப்பது வீ. வாடிச் சுருண்டு கீழே விழுந்தபின் அது செம்மல் என்றே சொல்லப்பட்டது.


ஆட்டுப் பாகன் ? ஆட்டிடையன்///
யானை இடையன்? யானைப் பாகன்///
குதிரைக்கன்று? குதிரைக்குட்டி////
ஆக்குட்டி (பசுவின் குட்டி) - ஆக்கன்று (பசுவின் கன்று) (பசு ஆரியம் - ஆ - தமிழ்; ஆவின் பால் - பசுவின் பால்)
தென்னங்கன்று ? தென்னம்பிள்ளை///
வேப்பம்பிள்ளை? வேப்பங்கன்று///
பனம்பிஞ்சு ? பனங்குரும்பை///
புளியங்குரும்பை? புளியம்பிஞ்சு
மா ஓலை - மாவிலை
பனை இலை? பனையோலை///
குருவிக்குட்டி? குருவிக்குஞ்சு///
நாய்க்குஞ்சு? நாய்க்குட்டி///
மான் குட்டி? மான் கன்று///
யானைச்சாணம்? யானை இலத்தி
எருமை இலத்தி? எருமைச் சாணம்
ஆட்டுச் சாணம்? ஆட்டுப் பிழுக்கை
கழுதைச் சாணம்? கழுதை விட்டை


ஆண்பால் பெண்பால்

அச்சன் அச்சி
அண்ணன் அண்ணி
அப்பன் அம்மை
அமைச்சன் அமைச்சி
அம்மான் அத்தை
அரசன் அரசி (ராஜா, ராணி ஆரியம் என்க)
ஆசிரியன் ஆசிரியை
ஆயன் ஆய்ச்சி
இடையன் இடைச்சி
உழவன் உழத்தி
ஊமையன் ஊமைச்சி
எம்பி எங்கை
எயினன் எயிற்றி
ஒருவன் ஒருத்தி
ஓதுவான் ஓதுவாள்

 ஆண்பால் பெண்பால்

கடுவன் மந்தி (குரங்கின் ஆணும் பெண்ணும்)
கடா    - கிடாரி, மறி (ஆடு)
கணக்கன் - கணக்கச்சி
கணவன் - மனைவி
கரியன் கரியள்
கலை - பிணை (மானின் ஆணும் பெண்ணும்)
காளை - ஆ (மாட்டின் ஆணும் பெண்ணும், பசு என்பது ஆரியம)
கிழவன் - கிழவி
குறவன் - குறத்தி
குரவன் - குரவள் (தலைவன்)
கூனன் - கூனி
கூகை - போந்து
கொழுந்தன் - கொழுந்தி (மைத்துனன்/ மச்சான்/ மைத்துனி/ மச்சினி/ மச்சி என்பதெல்லாம் ஆரியம்; மச்சான் என்பதை அளியன்/கொழுந்தன் என்றே வழங்குதல் வேண்டும்)

சிறுவன் - சிறுமி
சிவன் - சத்தி
சிறியன் - சிறியள்
சிறுக்கன் - சிறுக்கி
சிற்றப்பன் - சிற்றன்னை
சீமான் - சீமாட்டி (இவை இரண்டும் ஸ்ரீமான் என்ற ஆரியத்தின் அடி பிறந்தவையே)

சேவல் - பெட்டை (கோழியின் ஆணும் பெண்ணும்)
தச்சன் - தச்சச்சி
தம்பி - தங்கை
திருமால் - திருமகள்
திருவாளன் - திருவாட்டி (திருமதி என்பதன் மதி ஆரியமே, மதி என்பது நிலவு, அறிவு என்ற பொருளிலேயே தமிழில் வழங்கும், பெண் எனும் பொருளில் வழங்குதல் ஆரியத்தில் மட்டுமே)

மருத்துவன் - மருத்துவச்சி
மாமன் - மாமி
வீரன் - வீரி