பன்னாடையிற் படிந்தவை 3/11/15 -30/11/15

பன்னாடையில் இக்கிழமை படிந்தவை : 30/11/15

1. தேனின்னி பண்பல்லவா - தேனின் பண்பல்லவா
2. சோதனை - சிக்கல்/தடை (மகேசம்மா உதவுக)
3. அனுபவிக்க - துய்க்க
4. நான் ஒரு வணிகர் - நான் ஒரு வணிகன்
5. விளைகிறேன் - விழைகிறேன்
6. அறிஞரகளின் - அறிஞர்களின்
7. ஆளவிலை - ஆளவில்லை
8. இவத்தை - இவற்றை
9. அயர் சொல் - அயற்சொல்
10. யோசியுங்கள் - சிந்தியுங்கள்
11. ஆதங்கம் - ஏக்கம் (அம்மா - உதவுக)
12. ஆர்வளர்கள் - ஆர்வலர்கள்
13. இந்த பிழையை - இந்தப் பிழையை (அந்த/இந்த என்ற சுட்டுகளின் முன்னும் எந்த என்ற வினாவையும் அடுத்து வரும் வல்லினம் வரும்)
14. இப்படி பழகிவிட்டோம் - இப்படிப் பழகிவிட்டோம்
15. அதிகம் - நிறைய
16. தவறகுமாம்மா - தவறாகுமா அம்மா
17. வயழியாக - வழியாக
18. மலேசியாவை சேர்ந்தவள் - மலேசியாவைச் சேர்ந்தவள்
19. தாமதமாக - காலம்தாழ்த்தியே (மகேசம்மா உதவுக)
20. இசைப்பாட்டு தானே - இசைப்பாட்டுத் தானே
21. குலூர் - சூலூர்
22. கல்வியறிவாற்றலை கற்பிப்பவர் - கல்வியறிவாற்றலைக் கற்பிப்பவர்
23. இரவரின் பதில் - இருவரின் விடை
24. வித்தியாசம் - வேறுபாடு

பன்னாடையில் இக்கிழமை படிந்தவை - 27/11/15

1.  பிள்ளைகளை பிரியாது - பிள்ளைகளைப் பிரியாது - (இரண்டாம் வே. உருபை அடுத்து வரும் வல்லின மிகும்)
2.  வெளளத்தை - வெள்ளத்தை
3.  பிரமிப்பாகவும் - வியப்பாகவும்/மலைப்பாகவும்
4.  விடுப்பு கொடுக்கப் - விடுப்புக் கொடுக்கப் (வன்றொடர்க் குற்றியலுகரத்தை யடுத்து வரும் வல்லின மிகும்}
5.  சுயமதிப்பீடு - தன்மதிப்பீடு
6.  அதுகளுக்கு - அவைகளுக்கு
7.  நேற்றுதான் - நேற்றுத்தான் (வன்றொடர்க் குற்றியலுகரத்தை யடுத்து வரும் வல்லின மிகும்}
8.  வாக்கெடுப்பு - கருத்தெடுப்பு
9.  சுவாச - மூச்சு
10.  அனுபவிக்க - துய்க்க
11.  நான்கினக்கும் - நான்கினுக்கும்
12.  விளைகின்றேன் - விழைகின்றேன்
13.  அண்ணா பல்கலைக்கழகம் - அண்ணாப் பல்கலைக்கழகம் (இயல்பாக விளிவேற்றுமையில் முடிந்த பெயரை அடுத்து வரும் வல்லினம் மிகும்}
14.  கலைக்களஞ்சியத்தை செழுமை - கலைக்களஞ்சியத்தைச் செழுமை (இரண்டாம் வே. உருபை அடுத்து வரும் வல்லின மிகும்)
15.  கவிதை - பா
16.  இலங்கலை - இளங்கலை

பன்னாடையில் இக்கிழமை படிந்தவை: 18/11/15

1.  தீபாவளி கொண்டாட்டத்திற்கு - தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு
2.  விரிவுப் படுத்தி - விரிவு படுத்தி
3.  கலந்துக் கொள்ள - கலந்து கொள்ள
4.  எனக்குல் - எனக்குள்
5.  மகிழ்ச்சிம்மா - மகிழ்ச்சியம்மா
6.  பெற்றோற்களுக்கு - பெற்றோர்களுக்கு
7.  உரிமைக் கொண்டாடுவார்கள் - உரிமை கொண்டாடுவார்கள்
8.  இதற்கு புணர்ச்சி - இதற்குப் புணர்ச்சி
9.  பலுக்கி பார்த்து - பலுக்கிப் பார்த்து
10.  இந்த பண்ணி எப்படி வந்தது - இந்தப் பண்ணி எப்படி வந்தது
11.  எழுத கூடாது - எழுதக் கூடாது
12.  சொறகளுக்கும் - சொற்களுக்கும்
13.  எல்லா படங்களும் - எல்லாப் படங்களும்
14.  சகோதரி - அக்கை/ தங்கை
15.  கோடீஸ்வரர் - கோடியளவு செல்வர் (அம்மா.. அருளியாரின் உதவி தேவை..)
16.  சாமியார் - முனிவர்/துறவி
17.  மகான் - பெருமகன்
18.  விமர்சனம் - கருத்துரைப்பு
19.  பயணம் - செலவு
20.  நல்லதை செய்து - நல்லதைச் செய்து
21.  நடைமுறை பேச்சு - நடைமுறைப் பேச்சு
22.  இங்கு பதியும் - இங்குப் பதிக்கப்படும்
23.  வர தவறினாலும் - வரத் தவறினாலும்
24.  மலை இடது - மலை யிடத்து
25.  ஒப்பிடே - ஒப்பீடே
26.  மாயையக்கு - மாயைக்கு
27.  கல்யாணமான - மணமான
28.  நிலவை சுட்டும் - நிலவைச் சுட்டும்
29.  கைமாறு - கைம்மாறு
30.  வாக்கியங்களில் - சொற்றொடர்களில்
31.  பயம் - அச்சம்
32.  சிரிய- சிறிய
33.  கிராமமாக - சிற்றூராக
34.  பதில் வணக்கம் - விடை வணக்கம்
35.  வ்லலினம் - வல்லினம்
36.  பெருகிஓர் - பெருகியோர்
37.  நூற்றிக்கணக்கான - நூற்றுக்கணக்கான
38.  தெரியவில்லைங் - தெரியவில்லை
39.  நிர்வாகம் - நிருவாகம்/ ஆளுநர்குழு
40.  எபபடிப் - எப்படிப்
41.  முடியாமல் தொங்கும் - முடிக்கப்படாமல் தொங்கும்
42.  அதிகம் - கூடுதல்
43.  வின்வ - வினவ
44.  பொறுத்தளிர்க - பொறுத்தருள்க
45.  வீட்டுபேசி - வீட்டுப் பேசி
46.  அத்துணை கான - அத்துணைக்கான
47.  வாசிக்க - படிக்க
48.  நாகரிம் - நாகரிகம்
49.  வந்த்தெப்படி - வந்ததெப்படி

பன்னாடையில் இக்கிழமை படிந்தவை: 18/11/15

1.  தீபாவளி கொண்டாட்டத்திற்கு - தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு
2.  விரிவுப் படுத்தி - விரிவு படுத்தி
3.  கலந்துக் கொள்ள - கலந்து கொள்ள
4.  எனக்குல் - எனக்குள்
5.  மகிழ்ச்சிம்மா - மகிழ்ச்சியம்மா
6.  பெற்றோற்களுக்கு - பெற்றோர்களுக்கு
7.  உரிமைக் கொண்டாடுவார்கள் - உரிமை கொண்டாடுவார்கள்
8.  இதற்கு புணர்ச்சி - இதற்குப் புணர்ச்சி
9.  பலுக்கி பார்த்து - பலுக்கிப் பார்த்து
10.  இந்த பண்ணி எப்படி வந்தது - இந்தப் பண்ணி எப்படி வந்தது
11.  எழுத கூடாது - எழுதக் கூடாது
12.  சொறகளுக்கும் - சொற்களுக்கும்
13.  எல்லா படங்களும் - எல்லாப் படங்களும்
14.  சகோதரி - அக்கை/ தங்கை
15.  கோடீஸ்வரர் - கோடியளவு செல்வர் (அம்மா.. அருளியாரின் உதவி தேவை..)
16.  சாமியார் - முனிவர்/துறவி
17.  மகான் - பெருமகன்
18.  விமர்சனம் - கருத்துரைப்பு
19.  பயணம் - செலவு
20.  நல்லதை செய்து - நல்லதைச் செய்து
21.  நடைமுறை பேச்சு - நடைமுறைப் பேச்சு
22.  இங்கு பதியும் - இங்குப் பதிக்கப்படும்
23.  வர தவறினாலும் - வரத் தவறினாலும்
24.  மலை இடது - மலை யிடத்து
25.  ஒப்பிடே - ஒப்பீடே
26.  மாயையக்கு - மாயைக்கு
27.  கல்யாணமான - மணமான
28.  நிலவை சுட்டும் - நிலவைச் சுட்டும்
29.  கைமாறு - கைம்மாறு
30.  வாக்கியங்களில் - சொற்றொடர்களில்
31.  பயம் - அச்சம்
32.  சிரிய- சிறிய
33.  கிராமமாக - சிற்றூராக
34.  பதில் வணக்கம் - விடை வணக்கம்
35.  வ்லலினம் - வல்லினம்
36.  பெருகிஓர் - பெருகியோர்
37.  நூற்றிக்கணக்கான - நூற்றுக்கணக்கான
38.  தெரியவில்லைங் - தெரியவில்லை
39.  நிர்வாகம் - நிருவாகம்/ ஆளுநர்குழு
40.  எபபடிப் - எப்படிப்
41.  முடியாமல் தொங்கும் - முடிக்கப்படாமல் தொங்கும்
42.  அதிகம் - கூடுதல்
43.  வின்வ - வினவ
44.  பொறுத்தளிர்க - பொறுத்தருள்க
45.  வீட்டுபேசி - வீட்டுப் பேசி
46.  அத்துணை கான - அத்துணைக்கான
47.  வாசிக்க - படிக்க
48.  நாகரிம் - நாகரிகம்
49.  வந்த்தெப்படி - வந்ததெப்படி

பன்னாடையில் இக்கிழமை படிந்தவை: 11/11/15

1.  முறையோயென்று - முறையோவென்று
2.  பகிர்ந்துக் கொண்டே - பகிர்ந்து கொண்டே (மென்றொடர்க் குற்றியலுகர வீற்றின் முன் வரும் வல்லினம் அல்வழியில் மிகாது, பகிர்ந்து கொண்டே என்பது வினையெச்சத் தொடர்- அல்வழிப் புணர்ச்சி, எனவே மிகாது)
3.  சிறப்பியல்பை பயன்படுத்தாமல் - சிறப்பியல்பைப் பயன்படுத்தாமல் (இயல்பை என்ற இரண்டாம் வேற்றுமை யுருபுக்குப் பின் வரும் வல்லினம் மிகும்)
4.  காலை பணிவு - காலைப் பணிவு
5.  ராமாயணம் - இராமாயணம்
6.  தட்டச்சு செய்து - தட்டச்சுச் செய்து
7.  மங்குள் - மங்குல்
8.  நிறைவ - நிறைவாக
9.  தபாவளியை பற்றி பல - தீபாவளியைப் பற்றிப் பல
10.  பண்டிகை - விழா
11.  பிரத்த - பிரித்த

பன்னாடையில் இக்கிழமை படிந்தவை: 3/11/15

1. இதை துதி பாட்டாய் - இதை வழுத்துப் பாட்டாய்
2. இவையினைக் - இவற்றைக்
3. வேலைப் பழு - வேலைப் பளு
4. அதை தனியொரு - அதைத் தனியொரு
5. வரவில்லயா - வரவில்லையா
6. காட்டுகின்றீகளா- காட்டுகின்றார்களா
7. இலகுவாக - எளிதாக (அருளியாரிடம் பாருங்கள் அம்மா)
மேலும் படிக்க »

பன்னாடையிற் படிந்தவை என்றால் என்ன ?

உண்மையில் பன்னாடை என்பது நல்ல தமிழ் சொல் என்பதை அறியுங்கள். பனை மரத்திலும் தென்னை மரத்திலும் இருக்கும்நார் போன்ற பகுதிதான் பன்னாடை. அந்த காலத்தில் இதனை கள் முதலியவற்றை வடிகட்ட பயன்படுத்தினர்.

பன்னாடையானது மீந்த சக்கையை தன்னிடம் வைத்துக்கொண்டு நல்லவற்றை விட்டுவிடும். நன்னூலில் ஒரு பாடலில் பன்னாடையைப் பற்றி கூறுகிறார் பவணந்தி. நன்னூல் என்பது பதிமூன்றாம் 
நூற்றாண்டில் பவணந்திமுனிவரால் எழுதப்பட்டதமிழ் இலக்கண நூலாகும்.
 
"அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்."

பொருள்:

அன்னம்பசு போன்றோர் முதல் மாணாக்கர். மண்கிளி போன்றோர் இடை மாணாக்கர். இல்லிக் குடம் (ஓட்டைக் குடம்) ஆடு
ருமை,பன்னாடை (நெய்யரி) போன்றோர் கடை மாணாக்கர்.

விளக்கம்:

அன்னம் நீரிலிருந்து பாலைப் பிரித்து உண்ணும்அது போல் முதல் மாணாக்கர் ஆசிரியர் சொல்வதிலிருந்து நல்லனவற்றை எடுத்துக்கொள்வ
ர் பசுவானது கிடைக்கும்போது புல்லை தின்றுவிட்டு பின்னர் அதை அசை போடும். அதே போல் முதல் மாணாக்கர் ஆசிரியர் இருக்கும் போது அவர்களிடம் கலைகளைக் கற்றுக்கொண்டு பின்னர் அதனைப் பயிற்சிப்பர்.
மண்ணை எந்த அளவு பண்படுத்துகிறோம . அதுஅந்த அளவு பயன் தரும். அது போல் ஆசிரியரின் பயிற்சிக்கு ஏற்ப கற்பவரும்கிளியைப் போன்று சொன்னதைச் சொல்பவரும் இடை மாணாக்கர்.
ஓட்டைக்குடம் எதையும்தக்க வைத்துக்கொள்ளாது. ஆடு கண்ட இலைகளையெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேயும். எதையும் உருப்படியாக உண்ணாது. எருமை குளத்து நீரிலே கிடந்து அதனையே கலக்கிவிடும். நெய்யரி (பன்னாடை) நெயியை (நல்லதை) விட்டு கசடை (வேண்டாததை) வைத்துக்கொள்ளும். இத்தகைய குணங்கள் உடையவர்கள் கடை மாணாக்கர்.

பன்னாடை= சல்லடை:

எழுத்துப் பிழைகள் வருவது இயல்பே..... நம் குழுவிலும் வருகின்றன... ஆயினும் அதனை நேரடியாகச் சொல்வது சிலவேளை கசப்பில் முடியலாம்... திருத்தப்படாத பிழைகளைச் சொல்லாமல் விடவும் முடியாது... ஏனென்றால் இதுவே சரி என்று எண்ணிவிடக்கூடும்.

எனவே, ஒரு நாள் முழுக்க, குழுவில் போடப்படும் செய்திகளில் உள்ள எழுத்துப் பிழைகள் மற்றும் ஆரிய/பிறமொழிச் சொற்களை அடுத்த நாள் முதல் வேலையாகப் பட்டியலிட்டுக் கொள்வோம்... எழுதியவர் இன்னார் என்று குறிப்பிடாது பிழையும் திருத்தமும் மட்டும் போடப்படும்.. இப்பொறுப்பை யாரேனும் ஏற்க முன்வருக...  யாரும் முன்வரவில்லையாயின் நானே ஏற்றுக் கொள்கிறேன்...  என்ன.. சரிதானே நண்பர்களே... நன்றி..."

-அரங்கன் 
மேலும் படிக்க »

மரபு வழுக்கள் / மரபுத் தொடர்


மரபு வழுக்கள் / மரபுத் தொடர் இரண்டும் ஒரே பொருளா...?

வழு என்றால் குற்றம்....

மரபு வழு என்றால் மரபை ஒழுகாது எழுதுவது பேசுவது

மரபுத் தொடர் என்றால் மரபு இதுதான் என்று உணர்த்தும் தொடர்

எ-டு:

மரபு வழு - வாழைச்செடி
மரபுத்தொடர் - வாழைக்கன்று


இனி சில மரபு வழுக்களையும் அதற்கான திருத்தங்களையும் பார்ப்போம்......

 மரத்தை வெட்டு
தக்காளியை நறுக்கு

 தக்காளியை வெட்டு என்பது வழு... தவறு...

 விறகுகளைக் கட்டு
பூக்களைத் தொடு

பூக்களைக் கட்டு என்பது வழு... அதாவது தவறு... கட்டுவது என்பது கடினமான பொருட்களையே...

பூவைத் தொடுக்க வேண்டும் என்ற தமிழின் நுட்பம் காண்க....

 〰〰〰

 கீற்று/பத்து    தேங்காய் பத்து கொஞ்சம் குடு.... பூசணிக்காயை கீற்று கீற்றாய் நறுக்கி வை


விறகை எரி
குப்பையைக் கொளுத்து
விளக்கை ஏற்று

விளக்கைக் கொளுத்து என்றால் அது வழு....



நுங்கினைச் சீவு
இளநீரைச் சீவு
தலையை வாரு...

தலையைச் சீவு என்பது வழு... நுங்கு வெட்டிக் குடு என்பதும் வழு....

ஒரே காம்பில் திரண்டிருக்கும் பூவை கொத்து என்றும் பழத்தை குலை என்றும் அழைத்தல் மரபு...

ஓன்று - பல:

பூ - கொத்து
பழம் - குலை
மரம் - தோப்பு
வெவ்வேறு மரங்கள் - சோலை
ஆடு - மந்தை
மனிதன் - கூட்டம்
யானை - பந்தி
மலை - தொடர்
கல் - குவியல், கற்குவியல்
நாற்று - முடி
மயிறு - கற்றை
கடை - சந்தை

 〰〰〰〰

கற்களை ஓர் இடத்தில் திரட்டும்போது பரப்பிப்போட மாட்டார்கள குவித்தே போடுவார்கள், எனவே கற் குவியல். யானைகள் ஒன்று சேரும்போது வரிசை வரிசையாகவே சேரும். எனவே யானைப் பந்தி. விறகைத் திரட்டி உறுதியான கயிற்றால் (கொடியால்) இறுக்கிக் கட்டுகிறோம் எனவே விறகுக் கட்டு. நாற்றை அப்படி இறுக்கிக் கட்டினால் சிதைந்து போகும். எனவே மெதுவாக அவைகளில் சில நாற்றுகளைக் கொண்டே மென்மையாக முடிந்து வைக்கிறார்கள். ஆகவே அது நாற்று முடி.

 〰〰〰〰〰

செயல்களின் அடிப்படையில் மட்டுமல்லாது வடிவம் பருவம் என்னும் அடிப்படையிலும் சொல்லாட்சி அமைய வேண்டும்.

ஓர் இலையின் பல்வேறு பருவங்களைத்
தளிர்
இலை
பழுப்பு
சருகு

என்னும் வேறு வேறு சொற்களால் குறிக்கிறோம். இந்தச் சொற்களைச் சொன்னவுடனேயே நமக்கு அதன் தோற்றமும் விளங்கிவிடுகிறது.

 அரும்பு
முகை
மொட்டு
மலர்
அலர்
வீ
செம்மல்

என்னும் சொற்கள் நமக்குப் புதுமையாகத் தோன்றும். ஆனால் நமது முன்னோர்கள் மலரின் பல்வேறு பருவங்களை இந்தத் தனித்தனிச் சொற்களாலேயே குறித்து வந்தார்கள். மலரும் பருவத்தில் உள்ள பூவையே மலர் என்றார்கள். நன்றாக விரிந்தது அலர். அலர்ந்து வாடிய தோற்றத்தில் இருப்பது வீ. வாடிச் சுருண்டு கீழே விழுந்தபின் அது செம்மல் என்றே சொல்லப்பட்டது.


ஆட்டுப் பாகன் ? ஆட்டிடையன்///
யானை இடையன்? யானைப் பாகன்///
குதிரைக்கன்று? குதிரைக்குட்டி////
ஆக்குட்டி (பசுவின் குட்டி) - ஆக்கன்று (பசுவின் கன்று) (பசு ஆரியம் - ஆ - தமிழ்; ஆவின் பால் - பசுவின் பால்)
தென்னங்கன்று ? தென்னம்பிள்ளை///
வேப்பம்பிள்ளை? வேப்பங்கன்று///
பனம்பிஞ்சு ? பனங்குரும்பை///
புளியங்குரும்பை? புளியம்பிஞ்சு
மா ஓலை - மாவிலை
பனை இலை? பனையோலை///
குருவிக்குட்டி? குருவிக்குஞ்சு///
நாய்க்குஞ்சு? நாய்க்குட்டி///
மான் குட்டி? மான் கன்று///
யானைச்சாணம்? யானை இலத்தி
எருமை இலத்தி? எருமைச் சாணம்
ஆட்டுச் சாணம்? ஆட்டுப் பிழுக்கை
கழுதைச் சாணம்? கழுதை விட்டை


ஆண்பால் பெண்பால்

அச்சன் அச்சி
அண்ணன் அண்ணி
அப்பன் அம்மை
அமைச்சன் அமைச்சி
அம்மான் அத்தை
அரசன் அரசி (ராஜா, ராணி ஆரியம் என்க)
ஆசிரியன் ஆசிரியை
ஆயன் ஆய்ச்சி
இடையன் இடைச்சி
உழவன் உழத்தி
ஊமையன் ஊமைச்சி
எம்பி எங்கை
எயினன் எயிற்றி
ஒருவன் ஒருத்தி
ஓதுவான் ஓதுவாள்

 ஆண்பால் பெண்பால்

கடுவன் மந்தி (குரங்கின் ஆணும் பெண்ணும்)
கடா    - கிடாரி, மறி (ஆடு)
கணக்கன் - கணக்கச்சி
கணவன் - மனைவி
கரியன் கரியள்
கலை - பிணை (மானின் ஆணும் பெண்ணும்)
காளை - ஆ (மாட்டின் ஆணும் பெண்ணும், பசு என்பது ஆரியம)
கிழவன் - கிழவி
குறவன் - குறத்தி
குரவன் - குரவள் (தலைவன்)
கூனன் - கூனி
கூகை - போந்து
கொழுந்தன் - கொழுந்தி (மைத்துனன்/ மச்சான்/ மைத்துனி/ மச்சினி/ மச்சி என்பதெல்லாம் ஆரியம்; மச்சான் என்பதை அளியன்/கொழுந்தன் என்றே வழங்குதல் வேண்டும்)

சிறுவன் - சிறுமி
சிவன் - சத்தி
சிறியன் - சிறியள்
சிறுக்கன் - சிறுக்கி
சிற்றப்பன் - சிற்றன்னை
சீமான் - சீமாட்டி (இவை இரண்டும் ஸ்ரீமான் என்ற ஆரியத்தின் அடி பிறந்தவையே)

சேவல் - பெட்டை (கோழியின் ஆணும் பெண்ணும்)
தச்சன் - தச்சச்சி
தம்பி - தங்கை
திருமால் - திருமகள்
திருவாளன் - திருவாட்டி (திருமதி என்பதன் மதி ஆரியமே, மதி என்பது நிலவு, அறிவு என்ற பொருளிலேயே தமிழில் வழங்கும், பெண் எனும் பொருளில் வழங்குதல் ஆரியத்தில் மட்டுமே)

மருத்துவன் - மருத்துவச்சி
மாமன் - மாமி
வீரன் - வீரி
மேலும் படிக்க »

னகர, ணகர சொற்களின் வேறுபாடுகள்


இதுவரை ரகர, றகர, லகர, ளகர, ழகர வேறுபாட்டு சொற்களைக் கண்டொம்.

இனி காணவிருப்பது  னகர, ணகர சொற்களின் வேறுபாடுகள்.


னகர, ணகர சொற்களின் வேறுபாடுகள்

அரன் - சிவன்
அரண் - கோட்டை

அன்னம் - சோறு/ அன்னபறவை
அண்ணம் - வாயின் மேற்பகுதி

ஆனி - ஆனி மாதம்
ஆணி - இரும்பு ஆணி

என்ன - என்ன வேண்டும்
எண்ண - சிந்திக்க / நினைக்க

ஏனை - மற்ற
ஏணை - தொட்டில்

கனம் - பாரம்
கணம் - கூட்டம் / தேவகணம்

கனை - ஒலி / கனைத்தல்
கணை - அம்பு

கன்னி - திருமணமாகாதப் பெண்
கண்ணி - மாலை / பிராணிகளைப் பிடிக்கும் பொறி

தனி - தனிமையான
தணி- குறைதல்

தன்மை - இயல்பு
தண்மை - குளிர்ச்சி

தினை - ஒரு வகை தானியம்
திணை - குலம் / இடம்

தின் - சாப்பிடு
திண் - வலிமை / பலம்

நான் - யான்
நாண் - வெட்கம் / வில்லின் கயிறு

பனி - குளிர்ச்சி
பணி - வேலை
பானம் - குடிக்கும் பானம் / குளிர் பானம்

பேன் - தலையில் வாழும் பேன்
பேண் - காப்பாற்று

மன் - அரசன்
மண் - பூமி/ நிலம்


மனம் - உள்ளம்
மணம் - வாசனை / கல்யாணம்

மனை - வீடு
மணை - அமரும் பலகை

மான் - ஒரு மிருகம்
மாண் - பெருமை

வன்மை - வலிமை
வண்மை - கொடை / ஈகை


சில நகர னகர ணகர வேறுபாட்டுச் சொற்கள்:

இதன் - இதனுடைய ; இதண் - பரண்
உன்னி - நினைத்து; உண்ணி - நாயுண்ணி
என்னாள் - எனது நாள் ; எந்நாள் - எந்த நாள்

கான் - காடு ; காண் - பார்
கன்னி - குமரி ; கண்ணி - தலையில் அணியும் மாலை, தொடரியின் கண்ணி
(கன்னி, குமரி இரண்டும் தனித்தமிழ்ச் சொற்களே... குமரி என்பதைத் தேவையின்றி குமாரி , குமாரன் என நீட்டி ஆரியமாக வழங்குதல் கூடாது)

இதண் - பரண்,,, காவலுக்காக மூங்கில்களால் கட்டப்படும் உயரமான இடம், வீட்டுப் பரண்

 கோன் - அரசன் ; கோண் - வளைவு (கோணம்)
சனம் - ஜனம் (மக்கள்)
சானம் - பெருங்காயம் ; சாணம் - சாணி

 துனி - துன்பம்; துணி - ஆடை,
துனை - வேகம்; துணை - உதவி (எத்துணை என்ற வழக்கு காண்க)

 நன்னுதல் - நல்ல நுதல் (அழகிய நெற்றி); நண்ணுதல் - பொருந்துதல்

நன்னுதல் வானமென் றாகிட வேயிரு
நாணவில் கோடென தோன்றிடவே
பொண்வண்ணச் செங்கதிர் போலமின் னுஞ்சிறு
பொட்டொன்று சாந்தெடுத்(து) இட்டிடுவாள்.

சிட்டுக்கும்மி:

அம்மா தன் பெண்குழந்தைக்கு சாந்துப்பொட்டு வைக்கிறாள். அவ்வாறு சிவந்த பொட்டு வைத்தவுடன் அப்பெண்ணின் அழகிய நெற்றி வானமாகவும், வில் போன்ற இரு புருவங்கள் மலைகளாகவும், வைத்த அப்பொட்டு அம்மலையிடை எழுகின்ற ஞாயிறாகவும் தோன்றினவாம்.


கடந்த கிழமையில் வரையறுக்கப்பட்ட பாடத்திட்டங்கள் பின் வருமாறு:

1. ரகர றகர வேறுபாடு
2. லகர ழகர ளகர வேறுபாடு: (எ.டு: கலை, களை, கழை...)
3. னகர ணகர வேறுபாடு:
4. மரபு வழுக்கள் (எ-டு: தென்னங்கன்றா? தென்னஞ்செடியா? தென்னம்பிள்ளையா?)
5. புணர்ச்சி (எ-டு: கயிறு கட்டிலா? கயிற்றுக்கட்டிலா? கயிறுக்கட்டிலா?)
6. ஒருமை பன்மைப் பெயர்கள் (கிளிக்களா, கிளிகளா, கிளிகள் பறந்தது சரியா, கிளிகள் பறந்தன சரியா?)
7. சமற்கிருதச் சொற்களால் வரும் குழப்பங்கள் (எ-டு: கர்ப்பம் கர்பம், கருப்பம் எது சரி?...)


இவைகளில் இதுவரை நாம் கற்றறிந்தவை:

1. ரகர றகர வேறுபாடு
2. லகர ழகர ளகர வேறுபாடு.
3. னகர ணகர வேறுபாடு.


மேலும் படிக்க »

லகர ளகர ழகர வேறுபாட்டுச் சொற்கள்


லகர ளகர ழகர வேறுபாட்டுச் சொற்களை இனி கண்டறிவோம்.


அலகு - பறவையின் நீண்ட மூக்கு; அழகு - அவள் அழகு, தமிழ் அழகு...

 தவலை - தண்ணீர் எடுப்பது
தவளை - தண்ணீரில் இருப்பது

வாளை - மீன் பெயர்
வாழை - மரத்தின் பெயர்


அலை - கடலலை; அழை - கூப்பிடு

அலைத்தல் - அடித்தல் ; அழைத்தல் - கூப்பிடுதல்

அல்லி - ஒரு பூ; அள்ளி - கையால் அள்ளி

லகர ளகர மெய்களுக்குப் பின் வேறு எந்த மெய்யெழுத்தும் வாரா...

ழகர மெய்க்குப்பின் மெய்யெழுத்து வரும்

எ-டு; வாழ்த்து, வாழ்க்கை

அளி - கொடு ; அழி - இல்லாமல் செய்...

ஆலம் - ஒரு மரம்; ஆழம் - ஆழமான குளம்

இளி - ஒரு பண்: இழி - இழிவு

இலை - வாழை இலை; இளை - மெலி, இளைப்பு ; இழை - நூலிழை

ஒலி - கேட்கும் ஒலி; ஒளி - காணும் ஒளி; ஒழி - விடு, அழி, துப்புரவாக்கு....


குளம்பு - ஆடு, மாடுகளின் காலில் பகுதி ;

குழம்பு - சோற்றோடு சேர்த்து உண்ணும் உணவு.

(பிரேசில் நாட்டில் பயிரான காப்பிக்கொட்டை ஆடு, மாடு,மான் போன்ற விலங்குகளின் குளம்பு போலிருக்கும். அந்த அடிப்படையில் பிரேசிலியன் மொழியில் குளம்பு எனும் பொருளில் காப்பி எனும் சொல் அமைந்தது. இதை ஆய்ந்து உணர்ந்து பேரறிஞர் தேவநேயப் பாவாணர் காப்பி என்பதை குளம்பி என்று தமிழாக்க்கம் செய்தாராம்.

 கழை - மூங்கில் குழாய்... கழைக்கூத்தாடி

களை - ஓய்ந்து போதல், பயிர்களுக்கு இடையே வளரும் பயனற்ற செடி...

கலை - தமிழர் கண்ட 64 கலைகள்; என்னசேதிக் குழு (whatsapp) வழியாக தமிழைக் கற்பது இந்த  64க்குள்  வராது ...

உலை - கொதிகலன் boiler (உலை வச்சிட்டேன்... சோறு இப்ப ஆயிரும் என்ற பேச்சு வழக்கு)

உளை - விலங்குகளின் பிடறி மயிர்

உழை - உழைப்பு செய்தல்


லகர ளகர ழகர வேறுபாட்டுச் சொற்கள்.

ஒல்லி - மெலிந்த , ஒள்ளிய - ஒளி பொருந்திய

உளை - விலங்குகளின் பிடறி மயிர்...


குறுந்தொகை - 121:

"விரியுளைப் பொலிந்த வீங்குசெலல் கலிமா
   
வண்பரி தயங்க எழீஇத் தண்பெயல்"

விரி உளை பொலிந்த வீங்கு செலல் கலி வண் பரி மா தயங்க - அழகு பொருந்த விரிந்த தலையாட்டமமைந்த விரைந்த செலவினையும் கனைத்தலையும் உடைய வளவியபரிமா விளங்க....


மளைப்பு? மலைப்பு/// மலையை அண்ணாந்து கண்டால் வரும் உணர்வு*....

 விழைதல் - விருமபுதல்

துல்லிய மெல்லிய
துள்ளிய  குதித்த/ ஆடிய

ஈர்ந்தண் - ஒரு பொருள் இருசொல்... ஈரம் - குளிர்ச்சி, தண்மை - குளிர்ச்சி (தண்ணீர் என்பது குளிர்ந்த நீரே...)

இன்றைக்கு, பலர்,  இந்த ஒருபொருள் இருசொல்லை ஆங்கிலம் புகுத்தி சொல்கின்றனர்

butஆனா, gateகதவு, ditchகாவா......


பால் - பசுவின் பால்
பாள் - தாழப்பாள்
பாழ் - வீணாகுதல்

பாலை - நீர் வளமற்ற நிலம்.
பாளை - தென்னை மரத்தின் பூ மடல்

தாலி - மங்கலக்கயிறு
தாளி - சமையலுக்கு தாளித்தல்.
தாழி - பெரிய பானை


லகர ளகர சொற்களைப் பார்க்கும் இவ்வேளையில் லகர ளகர மெய்களை ஈற்றெழுத்தாகக் கொண்ட சொற்களின் புணர்ச்சியையும் சற்று நினைவு கூர்வோம்....

லகர,ளகர மெய் ஈற்றுப் புணர்ச்சி:

நிலைமொழி இறுதியில் உள்ள லகர, ளகர மெய்கள், வேற்றுமைப் புணர்ச்சியில், வருமொழி முதலில் வல்லினம் (க, ச, த, ப) வந்தால் முறையே றகர மெய்யாகவும், டகர மெய்யாகவும் திரியும்.

அதாவது லகர மெய் றகர மெய்யாகவும், ளகரமெய் டகர மெய்யாகவும் திரியும்.

சான்று:

கல் + கோயில் = கற்கோயில்
முள் + செடி = முட்செடி

(கற்கோயில் – கல்லால் ஆகிய கோயில். மூன்றாம் வேற்றுமைத் தொகை; முட்செடி – முள்ளை உடைய செடி. இரண்டாம் வேற்றுமைத் தொகை)


லகர,ளகர மெய்யீற்றுப் புணர்ச்சி:

அல்வழிப் புணர்ச்சியில், (வேற்றுமை உரபு புணர்ச்சி அல்லாதவை அல்வழி என்று முன்னர் கண்டோம்) வருமொழி முதலில் வல்லினம் வந்தால், லகர ளகர மெய்கள் முறையே றகர மெய்யாகவும், டகர மெய்யாகவும் திரிந்தும் வரும்; திரியாமல் இயல்பாயும் வரும்.

சான்று:

கால் + பெரிது = காற்பெரிது, கால்பெரிது
முள் + சிறிது = முட்சிறிது, முள்சிறிது

(இவை அல்வழியில் எழுவாய்த் தொடர்)

இச்சான்றுகளில் ஒரே புணர்ச்சியில் லகரம் றகரமாய்த் திரிந்தும், திரியாமல் இயல்பாயும் வந்துள்ளதையும், ளகரம் டகரமாய்த் திரிந்தும், திரியாமல் இயல்பாயும் வந்துள்ளதையும் காணலாம்


லகர,ளகர மெய்யீற்றுப் புணர்ச்சி:

அல்வழி, வேற்றுமை ஆகிய இருவகைப் புணர்ச்சியிலும் வருமொழி முதலில் மெல்லினம் வந்தால் லகர மெய் னகர மெய்யாகவும், ளகர மெய் ணகர மெய்யாகவும் திரியும்.

சான்று:

கல் + மனம் = கன்மனம்

வாள் + மாண்டது = வாண்மாண்டது
(கன்மனம் – கல் போன்ற மனம். உவமைத் தொகை; வாண் மாண்டது – வாள் மாட்சிமைப்பட்டது. எழுவாய்த்தொடர்)

தோல் + முரசு = தோன்முரசு
முள் + மலர் = முண்மலர்
(தோன்முரசு – தோலால் கட்டப்பட்ட முரசு. மூன்றாம் வேற்றுமைத் தொகை ; முண் மலர் – முள்ளை உடைய மலர். இரண்டாம் வேற்றுமைத் தொகை)


லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி

அல்வழி, வேற்றுமை ஆகிய இருவகைப் புணர்ச்சியிலும் வருமொழி முதலில் இடையினம் வந்தால் லகர, ளகர மெய்கள் இயல்பாகும்.

சான்று:

கொல் + யானை
= கொல்யானை

கள் + வழிந்தது = கள்வழிந்தது

(கொல் யானை – வினைத்தொகை; கள் வழிந்தது – எழுவாய்த் தொடர்)

வில் + வளைத்தான்
= வில் வளைத்தான்  வேற்றுமை

தோள் + வலிமை = தோள் வலிமை

(வில் வளைத்தான் – வில்லை வளைத்தான். இரண்டாம் வேற்றுமைத் தொகை; தோள் வலிமை – தோளினது வலிமை – ஆறாம் வேற்றுமைத் தொகை.)


லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி – சிறப்பு விதி

தனிக்குறிலைச் சார்ந்த லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி
அல்வழிப் புணர்ச்சியில், தனிக்குறிலின் பின் நின்ற லகர, ளகர மெய்கள் வருமொழி முதலில் தகர மெய் வருமானால் முறையே றகர, டகர மெய்களாகத் திரிவதோடு அல்லாமல் ஆய்தமாகவும் திரியும்.

சான்று:

கல் + தீது = கற்றீது, கஃறீது
முள் + தீது = முட்டீது, முஃடீது

இச்சான்றுகளில் வருமொழி முதலில் தகரமெய் வர, தனிக்குறிலின் பின் நின்ற லகர ளகரமெய்கள் பொதுவிதிப்படி முறையே றகர, டகர மெய்களாகத் திரிந்ததோடு மட்டும் அல்லாமல், ஆய்தமாகவும் திரிந்தன.

லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி – சிறப்பு விதி
சில சிறப்புச் சொற்களுக்கு மட்டுமுள்ள சில சிறப்பு விதிகளைக் காண்க

வேல் + தீது = வேறீது
வாள் + தீது = வாடீது

கால் + கை = கால்கை (காலும் கையும்)
பொருள் + புகழ் = பொருள்புகழ் (பொருளும் புகழும்)
வேல் + படை = வேற்படை (வேல் ஆகிய படை)
வாள் + படை = வாட்படை (வாள் ஆகிய படை )
நெல் + சிறிது = நெற்சிறிது
செல் + கரிது = செற்கரிது
கொல் + கடிது = கொற்கடிது
சொல் + புதிது = சொற்புதிது

இவை பொது விதிகளை மீறி வரும் சொற்களின் புணர்ச்சி என்க



லகர ழகர ளகர  வேறுபாடுகள்:

உளவு - வேவு
உழவு - பயிர்த்தொழில்
உழ - பண்படுத்த
உள - உள்ளன
உழி - இடம்; பக்கம்

 உலுக்கு - குலுக்கு, அசை;
உளுக்கு - சுளுக்கு
உல் - தேங்காய் உரிக்கும் கருவி
உள் - உட்புறம்
உல்கு - சுங்கம்
உள்கு - நினை
உல்லம் - ஒரு மீன்
உள்ளம் - மனம்



 எலும்பு - எலும்பு
எழும்பு - உயர்
எல் - பகல், ஞாயிறு
எள் - ஓர் செடி, நிந்தை

 எள்ளி என்பதை யோர்க



கலம் - பாத்திரம், அளவு
களம் - மிடறு, போர்க்களம்; நெற்களம்; இடம்
கலவு - கூட்டு (கலத்தல்)
களவு - திருட்டு
கலி - ஒலி, வறுமை
களி - மகிழ்ச்சி, ஓர் உணவு
கழி - நீக்கு



கல்வி - படிப்பு
கள்வி - திருடி
காலம் - பருவம்
காளம் - கருமை, நஞ்சு (காளமுகில் ; காளம் ஒரு அரிய தமிழ்ச்சொல்)



கிலி - அச்சம் (இது தெலுங்குச் சொல்)
கிளி - கிளிப்பிள்ளை
கிழி - கிழிப்பாய்



குலை - கொத்து
குழை - தளிர் இலை,, இளகச்செய், சேர்த்துக் குழை


கூலம் - கடைவீதி
கூளம் - குப்பை
கூலி - ஊதியம்
கூளி - பேய், பெருங்கழுகு


கேழ் - ஒப்பு, ஒளி, நிறம்
கேள் - கேட்பாய், உறவு (யாதும் ஊரே, யாவரும் கேளிர்)
கேலி - பகடி (கேலி, பரிகாசம் என்பன சமற்கிருத ஆரியச் சொற்கள், பகடி கிண்டல் என்பவை தமிழ்)


 கொலு - நிமிர்ச்சி, குமுகம்
கொழு - ஏரின் முனை, காறு
கொளு - பாட்டின் கருத்தினை விளக்குஞ் சொற்றொடர் (இந்த கொளு என்பதே க்ளூ என்ற ஆங்கிலச் சொல்லாக மாறியிருக்கக் கூடும்!)

 கொலை - கொல்லுதல்
கொளை - இசைப்பாட்டு
கொல் - கொல்லன், கொல்லு
கொள் - வாங்கு, கொள்ளு எனும் தவசம் (தானியம் என்பது தமிழில் தவசம்)

 கொல்லி - ஒரு மலை
கொள்ளி - நெறுப்புறு விறகு
கொல்லை - தோட்டம்
கொள்ளை - கொலை, விலை


 கோலம் - அழகு, தமிழ்ப்பெண்டிர் வாசலிலிடும் கோலம்
கோளம் - உருண்டை
கோழி - கோழி
கோளி - அத்தி
கோல் - அம்பு, ஊன்றுகோல், எழுதுகோல்
கோள் - புறங்கூறல், கோள் சொல்லுதல்



சுல்லி - அடுப்பு
சுள்ளி - சிறு விறகு



சூலி - பிள்ளைத் தாச்சி (கர்ப்பிணி என்பது ஆரியம்), சூல் கொண்ட முகில்
சூழி - உச்சி
சூளி - ஆண்மயிர்

சூலை - ஒரு நோய்
சூளை - செங்கற் சூளை
சூல் - கருவுறுதல்
சூழ் - சுற்றிச் சூழ்தல்
சூள் - சூளுரை, ஆணை, அருஞ்சூள் (அன்னைத் தமிழ்மேல் அருஞ்சூள் உரைத்தெழுந்தோம்)... (சபதம் என்பது ஆரியம்)



செதில் - மரச்செதில்
செதிள் - மீன் செதிள்

செல்லு - கழிவு
செள்ளு  - ஒரு பூச்சி , தெள்ளுப்பூச்சி


சோலி - கருமம் (இதுவும் தெலுங்குச்சொல்)
சோளி (பிச்சைக்காரர் பை) ....ஜோல்னா பை என்பது தொங்கு பை இது உருதுச் சொல், ஜோல்னா என்றால் ஊஞ்சலாடுதல்


தாலி - தாலிக்கயிறு
தாளி - பனை
தாழி - குடம், சாடி, (முதுமக்கள் தாழி)


நலி - வருந்துதல், நலிவடைதல்
நளி - நெருக்கம், குளிர்
நல்லார் - நல்லவர்
நள்ளார் - பகைவர்
மேலும் படிக்க »

குறளோவியங்கள் : குறளோவியன் கல்லூர் அ.சாத்தப்பன்

26|11|2015

வியாழன்    போற்றுதும்
வியாழன்    போற்றுதும்,
விரிந்த   வுலகையும்
விண்ணையும்   போற்றுதும்!
அன்புடை   மையி
னருமை      போற்றுதும்,
அன்புடன்    பொருந்திய
வாருயிர்     போற்றுதும்!
அன்புடை    யாரி
னுடம்பும்      போற்றுதும்,
அன்பினால்  பெற்றிடு
மார்வமும்    போற்றுதும்!
அறமே       பொருந்திய
வன்பினைப்   போற்றுதும்,
மறத்திற்    குமன்பே
முறையெனப்    போற்றுதும்!
அன்பில்    லாரை
யழிக்கு    மறமென
நன்றா     யுரைத்த
மறைமொழி   போற்றுதும்!
இன்பந்   தந்திடு
மன்பைப்    போற்றுவோம்,
அன்புட   னிணைந்த
உயிர்நிலை     போற்றியே!
வியாழனைப்   போற்றுவோம்
வியாழனைப்   போற்றுவோம்,
விடியும்     வேளை
வந்ததாய்ப்    போற்றியே!!

மேலும் படிக்க »

இலக்கணப்படி செய்யுள் எழுதுவது எப்படி ?

காரி    போற்றுதும்!
         காரி     போற்றுதும்!
மாரி     போற்றுதும்!
         மாரி     போற்றுதும்!


மழையா      லுலக
          மாட்சி   பெறுவதால்
மழையே     யமிழ்தென
           மேவிப்    போற்றுதும்!


துய்ப்பார்க்குத்      துய்க்கும்
            துய்பொரு    ளாக்கித்
துய்ப்பார்க்குத்        தானே
             துய்பொரு    ளுமாகி,
விரிநீ        ருலகத்து
              வாழு    முயிர்க்கெலாம்
வாழ்வு       தந்திடும்
               வான்மழை    போற்றுதும்!


உழவு        செய்வோர்க்
               குதவிகள்   புரிந்தே
வுலகோர்க்      கெல்லா
               முண்ணு   முணுவுக
ளீந்தவர்       பசிநீக்கு
                முயர்மழை    போற்றுதும்.


மாரி்      போற்றுதும்!
           மாரி    போற்றுதும்!
காரி     போற்றுதும்!
           காரி     போற்றுதும்!


*******************************************


காரி    போற்றுதும்!
மாரி     போற்றுதும்!

 (அஃறிணை உயிரீறுகளின் முன் வல்லினம் வந்தன... இவை இரண்டாம் வே.தொகைகள்.. எனவே வலி மிகாது வந்தன... )

மழையா லுலக

(உடன்மேல் உயிர் ஏறியது.. மழையால் உலகம்)

மாட்சி   பெறுவதால்
(அஃறிணை உயிரீற்றின் முன் வல்லினம் வந்தது... இரண்டாம் வே.தொகை.. எனவே வலி மிகாது வந்தது... )

மழையே  யமிழ்தென
 (உடம்படுமெய் புணர்ச்சி... யகரம் ஏறியது.. )
         
மேவிப்    போற்றுதும்!
( அஃறிணை உயிரீற்றின் முன் வல்லினம் வந்தது... இஃது நாலாம் வேஂதொகை.. எனவே வலி மிகுந்தது- மேவித்துப் போற்றுதும் என விரிக்க..)

துய்ப்பார்க்குத்      துய்க்கும்
(வன்றொடர்க் குற்றியலுகர முன் வல்லின மிகும்)
           
துய்பொரு    ளாக்கித்
 (துய்பொருள் வினைத்தொகை - துய்த்த/துய்க்கின்ற/துய்க்கும் என விரிக்க... அல்வழி... யகரவீற்றினை யடுத்து வரும் வல்லினம் அல்வழியில் மிகாது... எனவே மிகாது வந்தது)


துய்ப்பார்க்குத்        தானே
( ஆக்கித் துய்ப்பவார் - இகரவீற்று வினையெச்சமடுத்த வல்லினம் மிகும்; துப்பார்க்குத் -வன்றொடர்க் குற்றியலுகர முன் வல்லின மிகும்)

 துய்பொரு    ளுமாகி, (துய்பொருள் - இதுவுமது; பொருளும் ஆகி - உடல்மேன் உயிர் ஒன்றியது)

விரிநீ        ருலகத்து
( நீர் உலகத்து -உடல்மேன் உயிர் ஒன்றியது)
             
வாழு    முயிர்க்கெலாம் ( வாழும் உயிர்- உடல்மேன் உயிர் ஒன்றியது; உயிர்க்கு எலாம் - குற்றுகரமடுத்து உயிர் வந்ததால் அக்குற்றுகங் கெட்டது)

வாழ்வு       தந்திடும்
 (இரண்டாம் வே.தொகை.. எனவே வலி மிகாது வந்தது...
             
வான்மழை    போற்றுதும்! (இரண்டாம் வே.தொகை.. எனவே வலி மிகாது வந்தது... )

உழவு        செய்வோர்க் (உயிர்த்தொடர்க் குற்றுகரத்தை யடுத்து வரும் வல்லினம் இருவழியும் மிகாது.. எனவே உழவு செய் என மிகாது வந்தது)

குதவிகள்   புரிந்தே (செய்வோர்க்கு உதவி - செய்வோர்க்குதவி - குற்றுகரமடுத்து உயிர் வந்ததால் அக்குற்றுகங் கெட்டது)

வுலகோர்க்      கெல்லா (புரிந்தே உலகோர் - ஏகாரமுன் உயிர் வரின் யகர/வகர வுடம்படு மெய் ஏதேனும் வரும்... இங்கு வகரமெடுத்தது ஆசிரியர் தேர்வு ; உலகோர்க்கு எல்லாம் - உலகோர்க்கெல்லாம் - - குற்றுகரமடுத்து உயிர் வந்ததால் அக்குற்றுகங் கெட்டது )

முண்ணு   முணுவுக (எல்லாம் உண்ணு / உண்ணும் உணவு- உடன்மேல் உயிரொன்றின;)

ளீந்தவர்       பசிநீக்கு (உணவுகள் ஈந்தவர் / நீக்கும் உயர்- உடன்மேல் உயிர் ஒன்றின)

முயர்மழை    போற்றுதும். (மழை போற்றுதும் - அஃறிணை உயிரீற்றின் முன் வல்லினம் வந்தது... இரண்டாம் வே.தொகை.. எனவே வலி மிகாது வந்தது...

மாரி்      போற்றுதும்!
           மாரி    போற்றுதும்!
காரி     போற்றுதும்!
           காரி     போற்றுதும்!
(மேலே சொல்லப்பட்டது)
மேலும் படிக்க »