பன்னாடையிற் படிந்தவை என்றால் என்ன ?

உண்மையில் பன்னாடை என்பது நல்ல தமிழ் சொல் என்பதை அறியுங்கள். பனை மரத்திலும் தென்னை மரத்திலும் இருக்கும்நார் போன்ற பகுதிதான் பன்னாடை. அந்த காலத்தில் இதனை கள் முதலியவற்றை வடிகட்ட பயன்படுத்தினர்.

பன்னாடையானது மீந்த சக்கையை தன்னிடம் வைத்துக்கொண்டு நல்லவற்றை விட்டுவிடும். நன்னூலில் ஒரு பாடலில் பன்னாடையைப் பற்றி கூறுகிறார் பவணந்தி. நன்னூல் என்பது பதிமூன்றாம் 
நூற்றாண்டில் பவணந்திமுனிவரால் எழுதப்பட்டதமிழ் இலக்கண நூலாகும்.
 
"அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்."

பொருள்:

அன்னம்பசு போன்றோர் முதல் மாணாக்கர். மண்கிளி போன்றோர் இடை மாணாக்கர். இல்லிக் குடம் (ஓட்டைக் குடம்) ஆடு
ருமை,பன்னாடை (நெய்யரி) போன்றோர் கடை மாணாக்கர்.

விளக்கம்:

அன்னம் நீரிலிருந்து பாலைப் பிரித்து உண்ணும்அது போல் முதல் மாணாக்கர் ஆசிரியர் சொல்வதிலிருந்து நல்லனவற்றை எடுத்துக்கொள்வ
ர் பசுவானது கிடைக்கும்போது புல்லை தின்றுவிட்டு பின்னர் அதை அசை போடும். அதே போல் முதல் மாணாக்கர் ஆசிரியர் இருக்கும் போது அவர்களிடம் கலைகளைக் கற்றுக்கொண்டு பின்னர் அதனைப் பயிற்சிப்பர்.
மண்ணை எந்த அளவு பண்படுத்துகிறோம . அதுஅந்த அளவு பயன் தரும். அது போல் ஆசிரியரின் பயிற்சிக்கு ஏற்ப கற்பவரும்கிளியைப் போன்று சொன்னதைச் சொல்பவரும் இடை மாணாக்கர்.
ஓட்டைக்குடம் எதையும்தக்க வைத்துக்கொள்ளாது. ஆடு கண்ட இலைகளையெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேயும். எதையும் உருப்படியாக உண்ணாது. எருமை குளத்து நீரிலே கிடந்து அதனையே கலக்கிவிடும். நெய்யரி (பன்னாடை) நெயியை (நல்லதை) விட்டு கசடை (வேண்டாததை) வைத்துக்கொள்ளும். இத்தகைய குணங்கள் உடையவர்கள் கடை மாணாக்கர்.

பன்னாடை= சல்லடை:

எழுத்துப் பிழைகள் வருவது இயல்பே..... நம் குழுவிலும் வருகின்றன... ஆயினும் அதனை நேரடியாகச் சொல்வது சிலவேளை கசப்பில் முடியலாம்... திருத்தப்படாத பிழைகளைச் சொல்லாமல் விடவும் முடியாது... ஏனென்றால் இதுவே சரி என்று எண்ணிவிடக்கூடும்.

எனவே, ஒரு நாள் முழுக்க, குழுவில் போடப்படும் செய்திகளில் உள்ள எழுத்துப் பிழைகள் மற்றும் ஆரிய/பிறமொழிச் சொற்களை அடுத்த நாள் முதல் வேலையாகப் பட்டியலிட்டுக் கொள்வோம்... எழுதியவர் இன்னார் என்று குறிப்பிடாது பிழையும் திருத்தமும் மட்டும் போடப்படும்.. இப்பொறுப்பை யாரேனும் ஏற்க முன்வருக...  யாரும் முன்வரவில்லையாயின் நானே ஏற்றுக் கொள்கிறேன்...  என்ன.. சரிதானே நண்பர்களே... நன்றி..."

-அரங்கன்