திருக்குறளில் இருந்து என்னவெல்லாம் எடுத்துக் கொள்ள முடியும்.


1. வாழ்க்கை நெறிகள்
2. சிந்திக்கும் முறை பற்றிய பயிற்சி
3. தொகுத்து வகுத்துப் பகுத்துப் பார்க்கும் அறிவு
4. சொல்வளம் பெறுதல் பயிற்சி (ஞான்று/வைகல்/நாள்...)
5. புணர்ச்சி நெறிகள் அனைத்திற்கும் குறளில் காட்டுகள் உள்ளன.
6. அளபெடை குற்றுகர குற்றிகர எழுத்துகளை அறிதல்
7. பொருள்கோள் முறை
8. அணிபடச்சொல்லும் முறை (பொருளணியும் சொல்லணியும் - பொருளணிக்கு எத்தனையோ காட்டுகள் உண்டு... உடுக்கை இழந்தவன் கை என்பது ஒன்றே உவமை அமைக்கும் முறையைக் கற்றுத்தரும்; மற்றை அணிகளெல்லாம் குறளில் உள்ளன - சொல்லணிக்கு ஏராளமான பாடல்கள் உள்ளன...)
9. உவக்காண் எங்காதலர் சென்றார் இவக்காண் என்மேனி பசப்பூர் வது என்பதில் உள்ள குறிப்பு அறியும் பயிற்சி, நுண்பொருள் உணரும் அழகியற் பயிற்சி.
10. யாப்புப் பயிற்சி, செப்பலோசையை முழுதும் கற்கலாம்
11. தொடை நயம் (பேதமை யென்ப தியாதெனின் ஏதங்கொண் டூதியம் போக விடல் என்பதே சான்று)
12. மறைந்த தமிழ் மொழி வழக்குகளைக் கற்றுக்கொள்வது (உவக்காண்)

இன்னும விரிக்க விரிக்க மிகுந்து கொண்டே போகும்...

அதனால் திருக்குறள் கற்பதினால் பல பயன் உள்ளன.. உங்கள் வீட்டில் குறள் உள்ளதா?

நன்றி...

அரங்கன்