குறள் பொருள் கண்டறிக : அகவிழியன்


#௧

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்
(அதிகாரம்:குறிப்பறிதல் குறள் எண்:1096)

சொற்பொருள் :
உறாஅதவர்போல்-அயலார் போல;
சொலினும்-சொன்னாலும்.
செறாஅர்- காதலி / காதலன்
சொல்-மொழி;
ஒல்லை-விரைவில் ;
உணரப்படும்-அறியப்படும்.

குறிப்பு :
செறாஅர்=வெகுளாதவர்;
வெகுள்= வெறுப்பு =To hate/dislike;
வெகுளாமை= வெறுப்பின்மை= absence of hate;
வெகுளாதவர்= The person with absence of hate (Lover);

அஃது,
வெகுளாதவர்= காதலி / காதலன்

காதலர் பழகிப் புரிதல் ஏற்படும் காலகட்டத்தில் வெளிப்படும் உணர்வு பற்றிய குறள்.

பொருள் : கண்டறிக
*********************************************************
குறல் பொருள் கண்டறிக :

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்

(அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:44)

சொற்பொருள் :

பழி-தீவினை;
 அஞ்சி-நடுங்கி;
பாத்து-பிரித்துக் கொடுத்து; ஊண்-உண்ணுதல்; உடைத்தாயின்-உடையதானால்,

வாழ்க்கை-வாழ்தல்;
வழி-வழி;
எஞ்சல்-குறைவு; எஞ்ஞான்றும்-எப்போதும்; இல்-இல்லை.

குறிப்பு :

வழிஎஞ்சல் = Extinction of Lineage

என்றும் பொருள்படும்.

விளக்கம் : குழுவினர் கண்டறிந்து இங்கு பதியவும்.