தமிழர் இந்துக்கள் அல்ல என்று முதன்முதலில் சொன்னது யார் தெரியுமா ???

தமிழர் இந்துக்கள் அல்ல என்று முதன்முதலில் சொன்னது யார் தெரியுமா ???
முதன்முதலில் சொன்னது தமிழ்தான்.
தமிழிலக்கணந்தான் (தமிழ் இலக்கணம் தான்)
எப்படி ?
பந்து என்று  - என்பது எப்படிப் புணரும் ?..
பந்தென்று என்றல்லவா புணரும்..
பந்து என்பது மென்றொடர்க் குற்றியலுகரம்.
சந்து ஒன்று = சந்தொன்று
போந்து ஒன்று = பொந்தொன்று
ஆக பந்து சந்து சிந்து விந்து என்று அனைத்தும் மென்றொடர்க் குற்றியலுகரங்களே.
ஆனால் இந்து என்பது முற்றியலுகரமாகவே ஒலிக்கிறது.
இந்து ஒருவர் = இந்துவொருவர்
இந்து அங்கு = இந்துவங்கு
என்று உயிர் போலவே புணரும்.
ஏனெனில் இந்து என்பது தமிழன்று என்பதால்..
இதனால் தமிழர் இந்துக்கள் அல்ல என்று தமிழே காட்டுகின்றதென்க....
நமக்குத்தான் விளங்கவில்லை.
நம் இலக்கணம் தமிழ்  மொழியை மட்டும் காக்க என்று எண்ணிக் கொண்டுள்ளோம்... அது நம் இனத்தைக் காக்கவல்லது.
இனியாவது இதற்காவது... குற்றியலுகரத்தைத் தமிழர் போற்றவோராக...
-கவினப்பன்