தமிழில் வேர் சொற்கள் எப்படி உருவாயின ?

சுட்டடி வேர் பெரும்...மூலமாக...அமைந்துள்ளது. ஒப்பொலிச் சொல்லாக்கம் வழியும் சொல் உருவாகும். ஊராகச் சுட்டின் வாயிலாக பெரும் பகுதி சொற்கள் உருவாகியுள்ளன.

எ.கா.
அ, இ, உ சுட்டொலி.

க், ச், த், ப், ஞ், ந், ம், முதலிய மொழிமுதல் மெய்கள் ஊகாரச் சுட்டுடன் சேர்கையில் வித்து உருவாகும்.

உ> உல்> க்+உல்= குல்
குல்= கூடல், வளைதல், குத்தல் கருத்து வேர்.

குல்>குலம்.
குலம்= கூடி வாழும் மக்கட் கூட்டம்.

அல், இல், உல் இவையே மூல வேர்கள். இவற்றைப் பிளந்தால் ஊகாரமே மரபணு வேராக நிற்கும்.

ஆ, ஈ, ஊ அண்மை, முன்மை, சேய்மை சுட்டு வேர்கள். இவை மூல உணர்ச்சியொலிகளாகும்.

ஆ > சேய்மை
ஈ> அண்மை
ஊ> முன்மை

ஆ = சீற்றம்
ஈ= இழிவு, மகிழ்வு

ஊ= துன்பம்

பன்னிரண்டு உயிர்கள் உருவாக்கம்.

ஆ~ ஈ~ஊ} மூல உயிர்கள் 3.

ஆ>அ
ஈ>இ
ஊ>உ
 குறிலாய்த் திரிய 6 ஆகின.

ஈ> ஏ எனத் திரியும்.
ஊ> ஓ நெடிலெனத் திரியும்.

ஏ> எ எனவும்
ஓ > ஒ எனவும்
 குறிலாகி மொத்தம் பத்து உயிர்கள் உருவாகின.

பின்னர்,
அ+இ= ஐ

அ+உ= ஔ எனப் புணரொலிகள் தோன்றி பன்னிரண்டு உயிர்களும் உருவாகின.

// /
அரங்கன் ஐயா  : குழந்தைகள் முதலில் நெடில் உயிர்களையே சொல்லமுடிவது போல அல்லவா ஐயா...

திரு வளவன் ஐயா  : ஆம்...ஆம்..தமிழ்...இயற்கை மொழி.

அரங்கன் ஐயா :என் இரு மகள்களுக்கும் ககரம் பலுக்க வர மூன்றாண்டுகளாயிற்று... இன்னமும் கூடச் சிறியவளுக்கு வரவில்லை (நாலாண்டு முடியப்போகிறது) இவ்வாறே தமிழின் தோற்றத்திலும் முதலில் எளிய எழுத்துகளும் பிறகே அனைத்தும் உருவாயின என்பதேதாமே ஐயா..

திரு வளவன் ஐயா : மிகச் சரி. கூர்தலறம்...அவ்வாறே.///

மம் மம்> மம்மம் குழவி வளர்ப்பொலி

மா> மா ஆஅ> அம்மா
தாயின் மார்பில் பால் குடிப்பன எழுப்பிய மூல ஒலி.
இது மென்மை.
வன்மையாயின்...அப்பா என்றாகும்.

ங்கா என்பதும் குழவி வளர்ப்பொலி தானே ஐயா... அருமை....

இங்ஙா....குழவி வளர்ப்பொலியே. குழந்தை அழும் பொழுது எழும் ஒலி. பசிப்பதால் அழுவதாகக் தாய் கருதுவாள். எனவே குழந்தையின் பாலுக்கு இங்ஙா எனும் குழவி வளர்ப்பொலிச் சொல் உருவாகிற்று.

இதனால்தான் தமிழல்லாத மொழிவழி மொழிவரலாறு காண முயல்வது காட்டுக்குள் கண்ணைக் கட்டிக்கொண்டு செல்வது என்பார் பாவாணர் .

Culture என்ற சொல்லுக்கு ஆங்கில அறிஞர்கள் மூலத்தைக் காணவேண்டும் என்றால் தமிழைப் படிக்காது முடியாது...

அதனாற்றான்

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலி நீர்ஞாலத் திருளகற்றும் தன்னேரில்லாத தமிழ் என்றனர்... வேறு மொழிகளுக்கு இது போன்று பாடவும் முடியாது.. கூறவும் முடியாது...

ஐயப்பாடு : புதிய வேர் சொற்களை நாம் உருவாக்க கூடாதா?

புதிய வேர்கள் உருவாகா. மொழிஞாயிறு ஞா.தேவ நேயப் பாவாணரின் முதற்றாய் மொழி...காண்க.