திரட்டு: எழுத்திலக்கணம் இதுவரை

எழுத்தியல் - எழுத்திலக்கணம்:
1
எண், பெயர், முறை, பிறப்பு, உரு, அளவு, முதனிலை, ஈற்றுநிலை, இடைநிலை, போலி, சொல்லுருவாக்கம், புணர்ச்சி என்பன எழுத்தின் பன்னிரண்டு பகுதிகள் என்பதும்...
2
எழுத்து என்பது மொழிக்கு அடிப்படையான சொல்லுக்குக் காரணமாய் இருக்கும் ஒன்று என்பதும், அது முதல் சார்பு என இரு வகைப்படும் என்பதும்...
3
முதலெழுத்து உயிரும் மெய்யும் என்பதும், உயிர் பன்னிரண்டு மெய் பதினெட்டு என்பதும்...
4
சார்பெழுத்துக் குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் முதலியன என்பதும்...
5
உயிர் பன்னிரண்டு அகர முதல் ஔகார வரை என்பதும், குறில் அ இ உ எ ஒ என்ற ஐந்து என்பதும், நெடில் ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்ற ஏழு என்பதும், அ இ உ என்ற மூவெழுத்து மொழி முதற்கண் சுட்டுப் பொருள் தந்துவரின் சுட்டு என்பதும், எ யா இரண்டும் மொழிக்கு முதலிலும் ஆ ஓ இரண்டும் மொழிக்கு ஈற்றிலும் ஏ மொழிக்கு முதலிலும் ஈற்றிலும் வினாப் பொருள் தந்துவரின் வினா என்பதும்...
6.
ககரம் முதல் னகரம் வரை மெய் 18 என்பதும், வல்லினம் கசடதபற என்பதும், மெல்லினம் ஙஞணநமன என்பதும், இடையினம் யரலவழள என்பதும்.
7
தோற்றம் அளவு செய்கை பொருள்வடிவு என்பன. இனம் அமைத்தற்குக் காரணம் என்பதும், இனத்தினாலும் சிறப்பினாலும் பொருந்தி அகரம் முதல் னகரம் இறுதியாக வைக்கப்படுவது முறை என்பதும்.
8
உந்தியில் தோன்றும் காற்று, உச்சி கழுத்து மார்பு மூக்கு இவற்றை அடைந்து, உதடு நா பல் மேல்வாய் இவற்றின் முயற்சியால் வெவ்வேறு எழுத்தொலியாய் வரும் எழுத்தின் பொதுப்பிறப்பு என்பதும்
9
உயிருக்கும் இடையினமெய்க்கும் கழுத்தும், வல்லின மெய்க்குத் தலையும், மெல்லின மெய்க்கு மூக்கும் பிறப்பிடம் ஆகும் என்பதும்
10
ஆ ஆ அங்காத்தலாலும், இ ஈ எ ஏ ஐ அங்காப்போடு அண்பல்முதல் நாவிளிம்பு உறுதலாலும், உ ஊ ஒ ஓ ஒள இதழ்குவிதலாலும் பிறக்கும் என்பதும்...
11
கங முதல் நா முதல் அண்ணமும், சஞ இடைநா இடைஅண்ணமும், டண நுனிநா நுனி அண்ணமும், தந அண்பல் அடி நாமுடியும், பம மேலுதடும் கீழுதடும் உறப்பிறக்குங் என்பதும், ய க ர ம் எழுவளி மிடற்றுச் சேர்ந்த இசை மேல்வாயைப் பொருந்திச் செறிதலானும், ர ழ அண்ணத்தை நுனிநா வருடலானும், லகரம் அண்பல்லை நாவிளிம்பு வீங்கி ஒற்றுதலானும், ளகரம் அண்ணத்தை நாவிளிம்பு வீங்கி வருடலானும், வகரம் மேற்பல்லைக் கீழுதடு பொருந்துதலானும், றன மேல்வாயை நுனிநா அழுத்தித் தடவுதலானும் பிறக்கும் என்பதும்.
12
ஆய்தம் அங்காத்தலானும் நெஞ்சு ஓசையானும் பிறக்கும் என்பதும், சார்பெழுத்துக்கள் தம் முதலெழுத்துக்களின் பிறப்பிடமும் முயற்சியுமே கொண்டும் பிறக்கும் என்பதும்.
13
ஒலித்தலிடையே எடுத்தல் படுத்தல் நலிதல் விலங்கல் இவற்றால் சிறிது வேறுபாடு ஏற்படும் என்பதும்
14
யகரம் வருமொழி முதலில் வருதலால் நிலை மொழி இறுதிக் குற்றியலுகரம் கெட வரும் இகரமும், மியா என்ற அசைச் சொல்லின் இகரமும் குற்றியலிகரமாம் என்பதும்
15
குற்றியலுகரம் தனிநெடிற் பின்னும், தொடர் மொழியில் ஆய்தம் உயிர் வலி மெலி இடை என்ற எழுத்துக்களின் பின்னும் வரும் என்பதும்...
16
ஆய்தம் குற்றெழுத்தின் பின்னர் வல்லின உயிர்மெய் யெழுத்தின் முன்னர் வரும் என்பதும்
17
மெய் அகரத்தொடு சேரும்போது புள்ளியை ஒழித்ததன் வடிவே வடிவாகியும், ஏனைய உயிரொடு சேர்வுழி உருவு சற்றுத் திரிந்தும், ஏறிய உயிரின் மாத்திரையையே கொண்டு, மெய்யின் வடிவை மிகப்பெற்று, முன்னர் மெய்யொலியும் பின்னர் உயிர் ஒலியும் பொருந்த உயிர்மெய் தோன்றும் என்பதும்...
18
ஓசை குறையுமிடத்து மொழி மூன்றிடத்தும் உள்ள நெடில் பின்னர் இனமொத்த குற்றெழுத்து வர அதனோடு சேர்தலான் உயிரளபெடை தோன்றும் என்பதும், இனமில்லாத ஐகார ஒளகாரங்களின் பின்னர் முறையே இகர உகரங்கள் அளபெடைக்கண் வரும் என்பதும்.
19
ஙஞண நமன வயலள ஆய்தம் என்ற பத்தும் மொழிக்கண் குற்றெழுத்து குறிலிணையெழுத்து இவற்றையடுத்து மொழியிடையிலும் இறுதிக்கண்ணும் அளபெடுத்தலால் ஒற்றளபெடை தோன்றும் என்பதும்
20
தன்னை உணர்த்துதல், அளபெடுத்தல் என்ற இரண்டும் அல்லாதவழி மொழி மூன்றிடத்தும் ஐகாரமும், மொழி முதற்கண் ஒளகாரமும் குறுகுதலான் முறையே ஐகார ஒளகாரக் குறுக்கங்கள் நிகழும் என்பதும்...
21
லள மெய்திரிதலான் வரும் னகர ணகரங்களின் முன் ஒருமொழிக்கண்ணும், வருமொழி முதலில் வகரம் வருதலான் இருமொழிக்கண்ணும் மொழியீற்று மகரம் மகரக்குறுக்கமாம் என்பதும்
22
எழுத்துக்கள் யாவும் பழைய வரிவடிவினை உடையனவே என்பதும், பண்டு மெய்யொடு, எகரமும் ஒகரமும் ஏகார ஓகாரங்களிலிருந்து பிரித்துணரப் புள்ளிபெற்று வந்தன என்பதும்.
23
மாத்திரையின் அளவு கண்ணிமைப் பொழுதும் கைந்நொடிப்பொழுதும் என்பதும், நெடில் இரண்டும், குறிலும் ஐஒளக் குறுக்கங்களும் ஒன்றும், ஆய்தம் மெய் குற்றியலிகரம் குற்றியலுகரம் அரையும், மகரக்குறுக்கம் காலும் ஆகிய மாத்திரை பெறும் என்பதும்.
24
இசை, வினி, பண்டமாற்று முதலியவற்றில் உயிரும் மெய்யும் தம் அளவுகடந்து ஒலிக்கும் என்பதும்.
25 
உயிர் பன்னிரண்டும், கதநபம என்பனவற்றொடு சவஞய என்பனவாகிய ஒன்பது மெய்யொடு சேர்ந்த உயிராலாகிய உயிர்மெய்யும் மொழிக்கு முதலாம் என்பதும்...
26
ஐ ஒள அல்லனவற்றோடு சகரமும், உஊ ஒஓ அல்லனவற்றோடு வகரமும், ஆ எ ஒ என்பனவற்றோடு ஞகரமும், ஆகாரத்தொடு யகரமும் சேர்வதனாலேற்படும் உயிர்மெய்களே மொழிக்கு முதலாம் என்பதும்
27
உயிர் பன்னிரண்டும் ஙகரம் ஒழிந்த மெல்லின மெய் ஐந்தும், இடையினமெய் ஆறும், குற்றியலுகரமும் மொழிக்கு ஈறாம் என்பதும்
28
குற்றுயிர் ஐந்தும் அளபெடைக்கண் ஈறாம் என்பதும், எகரம் அளபெடைக்கண் அன்றி ஈறாகாது என்பதும், ஒகரம் நகரத்தொடும் ஒளகாரம் ககர வகரங்களொடும் ஈறாம் என்பதும்.
29
னகர ஈற்று அஃறிணைப்பெயர்கள் சில மகர ஈற்றொடு மயங்கிவரும் என்பதும்
30
கசதப என்ற நான்கும் தம்மொடு தாமே மயங்கும் உடனிலை மெய்மயக்கமும், ரழ என்ற இரண்டும் தம்மொடு பிறவேமயங்கும் வேற்றுநிலை மெய் மயக்கமும், ஏனைய பன்னிரண்டும் தம்மொடு தாமும் தம்மொடு பிறவும் மயங்கும் இருவகை மயக்கமும், எண்ணில் அடங்காதனவாகிய உயிர்மெய் மயக்கமும் என்பனவும்...
31
ஙம்முன் கவ்வும், வம்முன் யவ்வும், ஞம்முன் சயவும், நம்முன் தயவும், டறமுன் கசபவும், ணம்முன் க ச ஞ ட ப ம ய வ வ்வும், னம்முன் க ச ஞ ப ம ய வ ற வ் வும், மம்முன் பயவவும், யரழமுன் மொழிமுதல் மெய்யும், லளமுன் கசபவயவும் மயங்கும் என்பதும்
32
யரழமுன் கசதப ஙஞநம ஈரொற்றாதலும், ரகர ழகர ஈற்றுமுன் தனிக்குறில் வாராமையும்
33
லகர னகர மெய்களின் திரிபாகிய னகர ணகரங்களொடு ஈற்றில் ஈரொற்றாய் மகரம் வரும் என்பதும்
34
தம் மரபு கூறுமிடத்து முதல்நிலை இடைநிலை இறுதிநிலை என்ற வரையறை எழுத்திற்கு இன்று என்பதும்
35
அஇ, அய், அஉ, அவ் என்பனவும், ஒன்றன் பின் ஒன்று ஓசை விரவிவரும் இகரமும் யகரமும், ஆகிய எழுத்துப்போலிகள் கடியப்படும் என்பதும்...
36
நெட்டுயிர் காரமும், ஐஒள காரத்தொடு கானும் உயிர்க்குறிலும் உயிர்மெய்க் குறிலும் காரம், கான், கரம் என்ற மூன்றும் ஆகிய சாரியை பெறும் என்பதும், மெய்யின் இயக்கம் அகரத்தொடு சிவணும் என்பதும்
கண்டோம்.


இவற்றை நினைவிற் கொள்க...


சொல்லுருவாக்கவியல் என்பதில்...

37
எழுத்துத் தனித்தும் இணைந்தும் தொடர்ந்தும் பொருள்தரின் சொல்லாம் என்பதும், அது பகாச்சொல், பகுஞ்சொல் என்ற இருவகைப்படும் என்பதும்.
38
நெட்டெழுத்து ஏழே ஓரெழுத் தொருமொழி என்பதும், குற்றெழுத்து ஐந்து மொழியாகா, சில ஆகும் என்பதும்.
39
பகாச்சொல் பகுக்கப்படுவதன்றாய்ப் பெயர்ப்பகாச்சொல், வினைப்பகாச்சொல், இடைப்பகாச்சொல், உரிப்பகாச்சொல் என்ற நான்கு வகைப்படும் என்பதும்
40
பகுஞ்சொல் பகுக்கப்படும் இயல்பிற்றாய் பெயர், வினை என்ற இருவகைப்படும் என்பதும், பெயர் அறுவகை என்றும் வினை முற்றும் எச்சமுமாய் தெரிநிலை குறிப்பு என்று வரும் என்றும், எச்சம் பெயரெச்ச வினையெச்சமாய் இருவகைத்தாம் என்றும்...
41
பகுஞ்சொற்களைப் பகுதி விகுதி இடைநிலை சாரியை சந்தி திரிபு என்ற ஆறுபகுப்புள் ஏற்பன கொண்டு பிரித்துக் காண்க என்பதும்
42
நடமுதல் அஃகுஈறாக எடுத்துக்காட்டிய முறையை ஒட்டி இயல்பு உயிரும் ஒற்றும் குற்றியலுகரமும் ஆகிய இருபத்துமூன்று ஈற்றவாகிய முதல் நிலைத் தொழிற்பெயர்களைப் பகுதியாகக்கொண்டு இயற்றும் தெரிநிலைவினைச்சொற்கள் நிகழும் என்பதும்
43
அவ்விருபத்துமூன்று வகைப் பகுதிகளொடு “வி” என்பதோ “பி” என்பதோ ஏற்ற பெற்றி வந்து அமையும் தொழிற்பெயர்களைப் பகுதியாகக் கொண்டு ஏவல் வினைமுதல் தெரிநிலைவினை நிகழும் என்பதும்..
44
பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் ஆகிய பெயர்களை முதல்நிலையாகக் கொண்டு குறிப்பு வினைமுற்றுப்பகுஞ்சொல் நிகழும் என்பது.
45
அன் முதலாக உம் ஈறாகக்கிடந்த முப்பத்தொன்பதும், அவைபோல்வன பிறவும் வினை விகுதி என்றும்...
46
கடதற என்ற ஒற்றுக்களும், இன் என்னும் குற்றொற்றும் இறந்தகால இடைநிலை என்பது.
47
ஆ நின்று, கின்று, கிறு என்பன நிகழ்கால இடைநிலை என்பது.
48
பகர ஒற்றும் வகர ஒற்றும் எதிர்கால இடைநிலை என்பதும், காலங்காட்டும் இடைநிலைகளைச் சில வினைமுற்றுப் பகுபதங்கள் ஏலா என்பதும்.
49
குடுதுறு கும் டும் தும் றும் ப மார் மின் என்ற விகுதிகளும் வியங்கோள் விகுதியும் ஏவல் வினை முற்றுக்களும் எதிர்மறை வினைகளும், எதிர்காலமும், செய்யும் என்பது நிகழ்கால எதிர்காலங்களும் இடைநிலையின்றிக் காட்டும் என்பது.
50 
பகுதிக்கும், விகுதிக்கும் இடையில் இருக்கும் உறுப்பு இடைநிலை என்பதும்..

இவ்வாறான எழுத்திலக்கணத்தைக் கண்டோம் என்க...


இவற்றை நினைவிற் கொள்க...


நாம் எழுத்திலக்கணத்தைக் கற்றவர்கள் என்ற பெருமிதங் கொள்வோம் என்க..