குறளின் பொருள் கண்டறிக: அரங்கன்

திருக்குறள் 16/10/2015

வினைத்துய்மை

#653

மூலம்:
ஓஒதல் வேண்டு மொளிமாழ்குஞ் செய்வினை
யாஅது மென்னு மவர்.

சீர்பிர்த்து:
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅது மென்னு மவர்.

அருஞ்சொற்கள்:

ஓதல் - ஓவுதல் - விடுதல், ஒளிமாழ்கும் - நற்பெயரைத் தொலைக்கும்; ஆதும் - மென்மேலும் உயர்வேன் ; என்னும் - என்று சொல்லும்

பொருள் : குழுவினர் முயல்க. .

17/10/2015

திருக்குறள்:

பொருட்பால்:

பெரியாரைத் துணைக்கோடல்

#450

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடின்.

சீர் பிரித்து...:

பல்லார் பகைகொளலின் பத்துஅடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடின்.

அருஞ்சொற்கள்:

அடுத்த - மடங்கான

பொருள் : 

.................

18/10/2015

திருக்குறள்

ஆள்வினையுடைமை

#620

ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித்
தாழா துஞற்று பவர். .

சீர்பிர்த்து:
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித்
தாழாது உஞற்று பவர். .

அருஞ்சொற்கள்:

ஊழ் - fate; உப்பக்கம் - முதுகுப்பக்கம் (அதாவது தாண்டிச் செலுவர்/வீழ்த்துவர்; உலைவு - தளர்சசி; தாழாது - விடாது; உழற்றுதல் - முயற்சி செய்தல்.

பொருள் : குழுவினர் தமக்கான உரையினைத் தாமே எழுதிக் கொண்டு குழுவிலும் இடுக...

19/10/2015
திருக்குறள்.

தெரிந்து வினையாடல்:

அதிகாரத் தலைப்பின் விளக்கம்:
அஃதாவது , ஆராய்ந்து தெளியப்பட்ட வினைத்தலைவரை , அவரவர் திறமறிந்து அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட வினைகளை ஆற்றுவதன்கண் அவரை ஆண்டு நடத்துதல் .

#511
 
நன்மையுந் தீமையு நாடி நலம்புரிந்த
தன்மையா னாளப் படும் .

சீர்பிர்த்து:
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும் .

அருஞ்சொற்கள்:
எல்லாம் எளிமையான சொற்களே...

பொருள் : குழுவினர் முயல்க. .