நூல் ஆசிரியர் காலம் இலக்கண வகை: அரங்கன்

தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி எனும் ஐம்பெரும் பிரிவுகளைக் கொண்டதாகும் என்பதை நாம் அறிவோம்.

தமிழில் இலக்கண நூல்கள் பற்பல பற்பல. அவற்றுள் எண்ணிலடங்காதவை அழிவுற்றன என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. எஞ்சியதுள் கிடைத்தவை ஐம்பதுக்கும் மேற்பட்டவை. அவற்றுள் சிறப்பான இலக்கண நூல்களின் விவரங்கள் இதோ.

நூல்
ஆசிரியர்
காலம்
இலக்கண வகை

1. தொல்காப்பியம்
தொல்காப்பியர்
கி.மு.4ஆம் நூற்.
எழுத்து, சொல், பொருள் (செய்யுளியலில் யாப்பும் உவமையியலில் அணியும் உள்ளதனால் ஐந்திலக்கணமுமாம்)

2. நன்னூல்
பவணந்தி முனிவர்
13ஆம் நூற்.
எழுத்து, சொல்

3. நேமிநாதம்
குணவீர பண்டிதர்
12ஆம் நூற்.
எழுத்து, சொல்

4. இறையனார் களவியல்
---
7ஆம் நூற்.
அகப்பொருள்

5. நம்பியகப் பொருள்
நாற்கவிராசநம்பி
13ஆம் நூற்.
அகப்பொருள்

6.மாறனகப் பொருள்
குருகைப்பெருமாள் கவிராயர்
16ஆம்நூற்.
அகப்பொருள்

7.புறப்பொருள் வெண்பாமாலை ஐயனாரிதனார்
9ஆம் நூற்.
புறப்பொருள்

8. யாப்பருங்கலம்
அமிர்தசாகரர்
10ஆம் நூற்.
யாப்பு

9. யாப்பருங்கலக் காரிகை
அமிர்தசாகரர்
10ஆம் நூற்.
யாப்பு

19.தண்டியலங்காரம்
தண்டி
12ஆம் நூற்.
அணி

20. மாறன் அலங்காரம்
குருகைப்பெருமாள் கவிராயர்
16ஆம் நூற்.
அணி

21. வீரசோழியம்
புத்தமித்திரர்
11ஆம் நூற்,
ஐந்திலக்கணம்

22. இலக்கண விளக்கம்
வைத்தியநாத தேசிகர்
17ஆம் நூற்.
ஐந்திலக்கணம்

23. தொன்னூல் விளக்கம்
வீரமாமுனிவர்
!18ஆம் நூற்.
ஐந்திலக்கணம்

24. சுவாமிநாதம்
சுவாமி கவிராயர்
18ஆம் நூற்.
ஐந்திலக்கணம்

25. அறுவகை இலக்கணம்
தண்டபாணி சுவாமிகள்
19ஆம் நூற்.
ஐந்திலக்கணம்

26. முத்துவீரியம்
முத்துவீர உபாத்தியாயர்
19ஆம் நூற்.
ஐந்திலக்கணம்

27. பன்னிரு பாட்டியல்
---
10ஆம் நூற்.
பாட்டியல்

28. வெண்பாப் பாட்டியல்
குணவீர பண்டிதர்
12ஆம் நூற்.
பாட்டியல்

29. இலக்கண விளக்கப் பாட்டியல்
தியாகராச தேசிகர்
17ஆம் நூற்.
பாட்டியல்